'பாரதி கண்ணம்மா' பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!
'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி' ஆகிய சீரியல்களை இயக்கி பிரபலமமான, இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா இவருக்கு, இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01est58fyep9a7pk9c6q0rt0qd/c3-jpg_300x199xt.jpg)
இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் சாய் பிரமோதித்தா.
கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இயக்குனர் பிரவீன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலான, பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி ஆகிய தொடர்களை இயக்கி வருகிறார்.
சாய் பிரமோதித்தாற்கு, பிரமாண்டமாக நடந்த வளைகாப்பில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கர்ப்பகால போஸ் கொடுத்து அழகால் வசீகரிக்கும் சாய் பிரமோதித்தா
பட்டுபுடவையோடு கணவருடன் சாய் பிரமோதித்தா
கொள்ளை அழகு
சூரிய ஒளியில் மின்னும் பேரழகி
குழந்தை பிறந்தபின் நான்கு பேராக சமீபத்தில் கொடுத்த போஸ்