- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Singapenne Serial Twist Lalitha Stops Anandhi Entering House : சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு வீட்டிற்கு வர முடிவெடுத்துள்ளார். ஆனந்தியை வரவிடாமல் லலிதா மற்றும் துளசி செய்யும் சூழ்ச்சியால் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.

சிங்கப் பெண்ணே சீரியல்
சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு வீட்டிற்கு வர முடிவெடுத்துள்ளார் ஆனால் ஆனந்தியை வரவிடாமல் லலிதா அம்மா மற்றும் துளசி செய்யும் சூழ்ச்சி அதிரடி பேச்சுக்கள் இன்றைய எபிசோடில் என்ன நடக்கின்றது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துளசியை உள்ள போக சொல்லும் அன்னபூரணி:
அன்னைக்கு நடந்தது பெரிய தப்பு அதனால அவ்வளவு கோபப்பட்டேன். அப்போ கூட அவங்க மேல இருந்த தப்புதான் நான் உங்க மேல காட்டினேன். மத்தபடி உங்க மேல எனக்கு எந்த கோபமும் வருத்தமும் இல்லை என்று லலிதா அம்மா அன்னபூரணி இடம் சொல்கிறார். அதற்கு தேங்க்ஸ் மா ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்கிறார் அன்னபூரணி.
துளசி நான் லலிதா அம்மாவுடன் கொஞ்சம் தனியாக பேசணும் நீ கொஞ்சம் தயவு செஞ்சு உள்ள போமா என்று சொல்கிறார் அன்னபூரணி அதற்கு அன்புவின் தங்கச்சி மேடம் தான் சொல்றாங்கல்ல உள்ள போ என்று சொல்கிறார். துளசியும் உள்ள போகும்பொழுது லலிதா அம்மா துளசிதா என் வீட்டு மருமக. அவளுக்கு தெரியாம எந்த ஒரு விஷயமும் நடக்கக்கூடாது. என்று சொல்கிறார். அன்புவின் தங்கை மேடம் தான் தெளிவா சொல்றாங்க இல்ல அதனால தானே என்னை உள்ள போக சொல்றாங்க என்று சொல்கிறார் அதற்கு லலிதா நீ வேணும்னா உள்ள போ. துளசி இங்க தான் இருப்பா என்று சொல்லிவிட்டு இப்ப சொல்லுங்க என்று அன்னபூரணியிடம் சொல்கிறார். அன்னபூரணி லலிதா அம்மாவிடம் அம்மா நான் இப்ப பேச போறது உங்களுக்கு கஷ்டமாகவும் ஏத்துக்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனா இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையை மட்டும் வச்சு நம்ம எந்த ஒரு விஷயத்தையும் முடிவு எடுக்க முடியாது. எதிர்காலத்தையும் மனசுல வச்சு எடுக்கிற முடிவு தான் எல்லாருக்குமே நல்லது. அதனால ஒரு கோரிக்கையோட தான் நான் உங்கள பாக்க வந்திருக்கேன் என்று தயக்கத்துடன் கூறுகிறார் அன்னபூரணி.
சிங்கப் பெண்ணே சீரியல் ஆனந்தி
சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு வீட்டிற்கு வந்து வாழ்வதற்கு அன்பு இடம் வீட்டிற்கு வருகிறேன் என்று உறுதியாக கூறிவிட்டார் ஆனால் துளசியும் லலிதாவும் அம்மாவும் இருவரும் சேர்ந்து ஆனந்தி வீட்டுக்குள் வரக்கூடாது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர் அன்னபூரணி லலிதா அம்மாவிடம் பேசுதல்: அன்னபூரணி அன்புவின் அம்மா வண்ணம் லலிதாவிடம் வந்து பேச வருகிறார் வீட்டிற்குள் வந்ததும் வாங்க மேடம் என்று துளசி கூப்பிட. லலிதா துளசியிடம் இவங்களுக்கு தண்ணி கொண்டுட்டு வா என்று சொல்கிறார். துளசி சமையல் அறைக்கு செல்கிறார். அன்னபூரணி லலிதா அம்மா பார்த்தபடியே இருக்கிறார் ஏன் இப்படி என்னை பாக்குறீங்க என்று லலிதா அம்மா கேட்க. இல்ல உங்க கோவத்தை பத்தி எல்லாரும் சொல்லி இருக்காங்க பொங்கல் அன்னைக்கு கூட நானே நேர்ல பார்த்தேன். என் மேலேயே அவ்ளோ கோபப்பட்டீங்க. ஆனா இப்போ எந்த கோபமும் இல்லாம வீட்டுக்குள்ள உட்கார வச்சு உபசரிக்கிறீங்க உங்களுக்கு கோபம் தெரிஞ்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் சொல்கிறார் அன்னபூரணி. இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க துளசி குழப்பத்திலேயே இருக்கிறார்.
சிங்கப் பெண்ணே சீரியல் புரோமோ
அதெல்லாம் சரிதான் ஆனா எதிர்காலத்தை பத்தி முடிவு எடுக்கிறது ஒருத்தர் மட்டும் செஞ்சா போதுமா. குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரையும் யோசிச்சு எடுத்தா தானே முடிவு நல்லா இருக்கும். அன்புதான் அப்படி யோசிக்காம பண்ணிட்டானே. எல்லாம் அவளோட தலையெழுத்து, அதுல என் புள்ள போய் மாட்டிக்கிட்டா. என்று சொல்கிறார் லலிதா அம்மா. நம்ம திரும்பத் திரும்ப அதையே பேசிக்கிட்டு இருக்கிறதனால ஒன்னும் ஆகப்போறது இல்ல. திரும்பத் திரும்ப பேசிக்கிட்டே இருந்தா மன வருத்தங்கள் தான் அதிகரிக்கும் லதா அம்மாவிற்கு ஆறுதல் கூறுகிறார் அன்னபூரணி.
துளசியின் ஆவேச பேச்சு:
நீங்க யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை எல்லா வருத்தமும் எங்க அத்தைக்கு தான் என்று லலிதா அம்மாவை மீண்டும் கோபப்படுகிறார். உங்களை யார் இங்க வர சொன்னது? எதுக்கு நீங்க இங்க தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க ஆனந்திக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டு இருக்கீங்க அன்னபூரணியை திட்டுகிறார் துளசி. கேட்டு லலிதா அம்மா ஆனந்தி இந்த வீட்டுக்கு வந்து வாழ்ந்தால் என் வாழ்க்கைய தான் கடைசியாக இருக்கும் என்று கோபமாக கூறுகிறார். அன்னபூரணியோ ஆனந்தியை இங்கு எப்படியாவது வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது துளசி அன்னபூரணியை சரமாரியாக கேள்வி எழுப்பி திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.