அந்த நடிகர் ஜெயிலில் இருந்ததால்... சத்யராஜுக்கு கிடைத்த பாகுபலி 'கட்டப்பா' வாய்ப்பு!
ஒட்டு மொத்த உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, பெருமைக்குரிய திரைப்படம் 'பாகுபலி' இந்த படத்தில் முதலில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபலத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த இந்த படத்தை, இயக்குனர் ராஜமவுலி இயக்கி இருந்தார்.
இரண்டு பாகங்களாக வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த படத்தில் நடித்த அணைத்து நடிகர் - நடிகைகளுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் ஏற்று நடித்த வேடங்களுக்கு வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் கதையை எழுதிய கதையாசிரியரும், ராஜ மௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதிய போதே, யார் யார் இந்த கதாப்பாத்திரங்களுக்கு செட் ஆவார்கள் என தீர்மானித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் முதலில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானவர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் என்றும், அப்போதைக்கு அவர் ஜெயிலில் இருந்ததால், 'கட்டப்பாவாக' நடிக்க சத்யராஜ் தேர்வானார் என தெரிவித்துள்ளார்.
சிரித்து கொண்டே சிவலிஇதுமட்டும் இன்றி, மற்ற சில கதாபாத்திரங்களும் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ங்கத்தை தூக்க முயற்சிக்கும் பிரபாஸ்