'பிரேமம்' படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியதால்... சாய்பல்லவிக்கு அடித்த ஜாக்பார்ட்..!
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ப்ரேமம்' படத்தில் சாய்பல்லவிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் அல்போன்ஸ், புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'பிரேமம்'.
ஒவ்வொரு வரும் தங்களது கல்லூரி, பள்ளி, கல்லூரி காலங்களில் கடந்து வரும் காதலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது தமிழில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான , 'ஆட்டோகிராப்' மாதிரியான கதையம்சத்தை கொண்ட படம் தான். ஆனால் அப்படியே இல்லாமல், கதையில் சில மாற்றங்களும் இருக்கும்.
பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
பின்னர் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றதை தொடர்ந்து, அவர் தமிழ்த்திரையில் தனுஷுடன் ’மாரி 2’,சூர்யாவுடன் என்ஜிகே’ உள்பட சில ஹிட் படங்களிலும், சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்யாமலும், துளியும் கவர்ச்சி காட்டாமல் ஒரு படத்தின் கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இவரை மிகவும் பிரபலமடைய செய்த 'பிரேமம்' படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு முதலில் அணுகப்பட்டவர் நடிகை அசின் தானாம். ஆனால் அவர் ஹிந்தி திரையுலகில் பிசியாக இருந்தார். மேலும் காதலருடன் திருமண பேச்சும் துவங்கி விட்டதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே இந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு, சாய் பல்லவி மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நடிகை அசின் விலகியதால் இந்த சூப்பர் வாய்ப்பு, சாய் பல்லவிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.