சினிமாவை போல் பிசினஸிலும் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்... எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?
Nayanthara : சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் இவர், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு சுமார் ரூ.10 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார் நயன்.
இவ்வாறு சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அது எந்தெந்த தொழில்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரெளடி பிக்சர்ஸ்
நடிகை நயன்தாரா, முதன்முதலில் முதலீடு செய்த தொழில் என்றால் அது சினிமா தான். இதில் ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தொடங்கிய நயன்தாரா, அதன் மூலம் பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இவர் தயாரிப்பில் இதுவரை நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர கூழாங்கல், வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், ஊர்க்குருவி போன்ற படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.
சாய் வாலே
சினிமாவுக்கு பின்னர் நயன்தாரா முதலீடு செய்த தொழில் என்றால் அது சாய் வாலே எனும் தேனீர் பிராண்ட் உடன் தான். இந்த நிறுவனத்தில் அவர் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாய் வாலே என்பது தென்னிந்தியாவில் நன்கு விற்பனையாகி வரும் டீ பிராண்ட் என்பதனால் இதன்மூலமும் நன்கு சம்பாதித்து வருகிறார் நயன்.
இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோவான KGF இயக்குனர்! சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பணத்தை வாரிவழங்கிய பிரசாந்த் நீல்- எவ்வளவு தெரியுமா?
லிப் பாம் கம்பெனி
நடிகை நயன்தாரா தனது தோழி ரெனிட்டா ராஜன் உடன் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் தான் லிப் பாம் கம்பெனி. முழுமுழுக்க லிப் ஸ்டிக்கிற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நயன்தாரா இருந்து வருகிறார். இந்த தொழிலும் அவருக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது.
ஃபிபோலா
சமீபத்தில் நடிகை நயன்தாரா, ஃபிபோலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். இறைச்சிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது ஃபிபோலா, நடிகை நயன்தாராவும் அசைவப் பிரியர் என்பதால அவரையே இந்நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்க வைத்துள்ளனர்.
அடுத்தது என்ன?
நடிகை நயன்தாரா அடுத்ததாக எண்ணெய் பிசினஸில் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தபோது இதற்கான பணிகளை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த தி லெஜண்ட் பட வசூல் வேட்டை! அறிமுக படத்திலேயே அண்ணாச்சி படைத்த மாபெரும் சாதனை