- Home
- Cinema
- Andrea Jeremiah : புஷ்பா ஐட்டம் சாங் பாடியது யார் தெரியுமா? காந்த குரலுக்கு சொந்தமான நடிகை !!
Andrea Jeremiah : புஷ்பா ஐட்டம் சாங் பாடியது யார் தெரியுமா? காந்த குரலுக்கு சொந்தமான நடிகை !!
Andrea Jeremiah : நடிகையாக காலூன்றிய ஆண்ட்ரியா சிறந்த பின்னணி பாடகியாக இன்னும் கவனிக்கப்படாமலேயே தான் உள்ளார். இவர் குரலில் வெளிவந்த 'ஓவ் சொல்ரியா' என்னும் புஷ்பா பட பாடல் செம வைரலாகி வருகிறது.

Andrea Jeremiah
கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடியதன் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஆண்ட்ரியா.
Andrea Jeremiah
இதைத்தொடர்ந்து கதநாயகி வாய்ப்பு கிடைத்தது . பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
Andrea Jeremiah
முன்னதாக மணிரத்னத்தின் உதவி இயக்குனராக இருந்த வி. பிரியா இயக்கிய கண்டநாள் முதல் படத்தில் ஆண்ட்ரியா சிறு வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரசன்னா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Andrea Jeremiah
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் திறம்பட நடித்திருந்த ஆண்ட்ரியா சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
Andrea Jeremiah
மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பறிவாளன், விஸ்வரூபம், மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திட்டுள்ளார்.
Andrea Jeremiah
பின்னணி குரல் கொடுப்பதிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன்
உள்ளிட்ட பட நாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
Andrea Jeremiah
அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், வானம், தாதா என 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
Andrea Jeremiah
இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது.
Andrea Jeremiah
இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
Andrea Jeremiah
.அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் ஆன்ட்ரியா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு அவர் சமீபத்தில் பபுஷ்பா படத்தில் பாடியுள்ள பாடல் செம ஹிட் அடித்து வருகிறது.