'அன்புடன் குஷி' புதிய நாயகியாக மாறிய சீரியல் நடிகரின் காதலி..! வெளியான லேட்டஸ்ட் தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'அன்புடன் குஷி' சீரியலில் இருந்து நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது, பிரபல சீரியல் நடிகரின் காதலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்தம்பி சீரியலுக்கு பின், ப்ரஜின் நடித்து வரும் சீரியல் 'அன்புடன் குஷி'
இந்த சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக ஆரம்பத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்த நிலையில், பின்னர் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
அவர் வெளியேறியதால், ஹீரோயினாக நடிக்க குஷி கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வந்தார்.
சுமார் 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இருந்து இரண்டாவது முறையாக நாயகி ரேஷ்மாவும் வெளியேறவுள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதுகுறித்து ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது, நான் அன்புடன் குஷி தொடரிலிருந்து விலகுகிறேன். இனி என்னை அத்தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது.
அந்தக் கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்கிறேன். அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆதரவு எனக்கு என்றும் தேவை. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
எனவே இதை தொடர்ந்து, 'அன்புடன் குஷி' சீரியலில் யார் நாயகியாக நடிப்பார் என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில் தற்போது புதிய நாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சீரியலில் நாயகியாக... 'ராஜா ராணி 2 ' சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும், சிந்துவின் காதலி ஸ்ரேயா தான் நடிக்க உள்ளாராம்.
இவர் ஏற்கனவே, திருமணம் சீரியலில் சிந்துவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஸ்ரேயா அன்புடன் குஷி சீரியலில் நாயகியாக மாறியுள்ளார்.