பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? உண்மையை உடைத்த விஜய் பட நடிகை!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பட்டியலில் தொடர்ந்து, நடிகை அம்ரிதா ஐயர் பெயர் அடிபட்டு வருவதை தொடர்ந்து , இதுகுறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அம்ரிதா ஐயர் தமிழில் பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான 'படை வீரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதைத்தொடர்ந்து, தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிகில்' படத்தில், கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக நடித்திருந்தார்.
இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
கடந்த ஆண்டு, தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின், தெலுங்கு ரீமேக்கில் நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.
மேலும் பல படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அம்ரிதா ஐயர், விரைவில் தமிழில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ஏற்கனவே, விளக்கம் கொடுத்ததும்... அம்ரிதாவிற்கு ஆர்மி துவங்கும் அளவிற்கு இவருடைய ரசிகர்கள் சென்று விட்டனர்.
இந்நிலயில் மீண்டும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்க நினைப்பதாகவும், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.