14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்..! 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..!
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் மகள் தன்னுடைய 14 வயதில் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அமீர் கான், 1986 ஆம் ஆண்டு, ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் ஐரா கான்.
பின்னர், இருவரும் ஒருமனதாக 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் 2005 ஆம் ஆண்டு கிரண் ராய் எதுவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமீர்கான் மகள் ஐரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ௧௦ நிமிட வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது "என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்க்குள்ளாகவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் மனம் ஒற்று தான் விவாகரத்து நடந்தது.
அவர்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கின்றனர். எனவே எங்கள் குடும்பம் உடைந்து விடவில்லை.
எனக்கு 14 வயதாக இருந்தபோது நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் என்ன என்பது எனது புரியவில்லை. வித்தியாசமாக உணர்ந்தேன்.
ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார் என்பதை நான் தெளிவு படுத்தி கொள்ளவே ஒரு வருடம் ஆகியது.
இதுகுறித்து தெரியவந்ததும், பெற்றோருக்கு மனதில் பயம் வரவில்லை. அவர்களுக்கு மெயில் போட்டேன். எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலில் இருந்து மீட்டனர்.
அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. முடிந்து விட்டது என்று நான் கடந்து வந்து விட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும் எனது உணர்வுகள் மற்றவர்களை காயப்படுத்துவதை நான் விரும்பவில்லை என மிகவும் துணிச்சலாக தன்னுடைய 14 வயதில் நடந்ததை 9 வருடங்களுக்கு பின் 23 வயதில் வெளிப்படுத்தியுள்ளார் ஐரா கான்.
இந்த சிறிய வயதில், மிகவும் நம்பிக்கை மற்றும் துணிச்சலாக பேசிய ஐராவை பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.