MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?

ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?

ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், தன்னைப் பற்றிய தவறான தகவல்களை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Feb 04 2025, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா:

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா:

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன்னுடைய உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் - தந்தையின் உதவியோடு  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 

25
வதந்திகள் பரப்பியதற்கு எதிராக வழக்கு:

வதந்திகள் பரப்பியதற்கு எதிராக வழக்கு:

இதுவரை நடிகர், நடிகைகள் இது போல் வழக்கு தொடர்வது தொடர்கதையாகி இருந்தாலும், நட்சத்திர ஜோடிகளின் மகள், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்ததால்... ஆராத்யாவின் இந்த செயலை பலர் மனதார பாராட்டி இருந்தனர். இந்த மனு தொடர்பாக, தவறான செய்தியை பரப்பிய கூகிள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திருமணத்தால் விஜய் டிவி ஹிட் சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட நடிகை! இனி இவருக்கு பதில் இவர்?

35
கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்:

கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்:

மேலும் இந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதே போல் பாலிவுட் டைம்ஸ், கூகிள் மற்றும் தொடர்புடைய பிற தரப்பினருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

45
ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து பரவிய வதந்தி:

ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து பரவிய வதந்தி:

முன்னதாக, ஆராதியாவின் உடல் மற்றும் மன நலம் குறித்து தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல்களை முடக்கவும் கூகிளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சேனல்களை இயக்குபவர்கள் குறித்த விவரங்களை வழங்குவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஜினியின் செண்டிமெண்ட்; அதே நாளையே 'கூலி' ரிலீசுக்கு முடிவு பண்ணிய சன் பிச்சர்ஸ்!
 

55
நீதிமன்றம் வலியுறுத்திய தகவல்:

நீதிமன்றம் வலியுறுத்திய தகவல்:

அதே போல் ஒரு குழந்தையின் உடல் அல்லது மன ஆரோக்கியம் பற்றிய வதந்திகளை பரப்புவது சட்டவிரோதமானது என்றும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved