அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி
நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முதலில் தொற்று இல்லை எனக்கூறப்பட்ட ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டி பிதா மகன் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடது. இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்த செய்தி பாலிவுட்டை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில் அமிதாப் பச்சன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே முதலில் ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளான ஆராத்யா ஆகியோருக்கு முதலில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தன. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
.இந்நிலையில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட antigen பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகளான ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து பலரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்த மொத்த நபர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருடைய மனைவி ஜெயா பச்சன், மகள் ஸ்வேதா பச்சன் நந்தா, அவர்களுடைய குழந்தைகள் நவ்யா நவேலி நந்தா மற்றும் அகஸ்தியா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது.