விபச்சார வழக்கில் சிக்கியதால் அடிவாங்கிய திருமண வாழ்க்கை... ஓராண்டு முடிவதற்குள் விவகாரத்து வாங்கிய நடிகை!
தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன்
திரையுலகில் 3 நாள் கொண்டாட்டமாக அரங்கேறும் பல திருமணங்கள் ஓராண்டுக்குள் விவகாரத்தில் முடிவதை காண முடிகிறது. அப்படி விபச்சார வழக்கில் சிக்கியதால் பிரச்சனைகளை சந்தித்த பிரபல நடிகை விவகாரத்து பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு. விபச்சார வழக்கில் சிக்கியதால் இவருக்கான திரையுலக கதவுகள் மூடப்பட்டன. சரி சீரியல்களிலாவது நடிக்கலாம் என நினைத்தவருக்கு பேரிடியாக பாலியல் தொழிலாளி வேடங்கள் வர கடுப்பானவர் அதிலிருந்தும் விலகினார்.
விபச்சார வழக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர் இயக்குநர் ரோஹித் மிட்டல் என்பவரை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, அதாவது 8வது மாதத்திலேயே விவகாரத்து பெற்றார்.
தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன். நானும் - ரோஹித்தும் 8 மாதத்திலேயே பிரிந்துவிட்டதால் அது பிரேக்கப் போன்று தான் இருந்தது. விவாகரத்து என்பது பெரிய வார்த்தை. விவாகரத்து ஆனதால் நான் கவலை அடைந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நமக்கு நாமே நண்பன் அல்லது எதிரியாகிவிடுவோம். நானோ எனக்கு தோழியானேன் என விளக்கமளித்துள்ளார்.