கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சமந்தா..! வைரலாகும் செம்ம கியூட் போட்டோ..
நடிகை சமந்தா முதல் முறையாக தன்னுடைய அம்மா தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருடைய பாட்டி மற்றும் இரு சகோதரர்களும் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா இந்த கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றி வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே, சிறிய கார்டன் அமைத்து அதில் கீரை வகைகள், மட்டும் முட்டை கோஸ் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட இது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற வேலைகள் செய்வதால் மனம் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஷூட்டிங் பணிகள் இல்லாத போது, நடிகை சமந்தா இது போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருவதால் , ரசிகர்கள் இவரை பாராட்டி வந்தனர்.
இதை தொடர்ந்து, சமீபத்தில் கொண்டாடப்பட்ட யோகா தினத்தன்று அமைதியாக அமர்ந்து மெடிடேஷன் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதுபோல் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், நடிகை சமந்தா ஆசையாக வளர்த்து வரும் நாய் குட்டியும் இவருடன் அமர்ந்திருந்தது. இந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சமந்தா, தன்னுடைய அம்மா மற்றும் சகோதரர்களுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சமந்தா, கை குழந்தையாக உள்ளார். அவரை அவருடைய அம்மா தூக்கி வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் சமந்தாவின் சகோதரரகள், பாட்டி ஆகியோரும் உள்ளனர்.
இந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியுள்ளதாவது, 'நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான். மிகவும் மிஸ் செய்கிறேன்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
லாக் டவுன் பிரச்சனைகள் முடிவடைந்து, மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியதும் , சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.