சாய் பல்லவி தங்கையிடம் ஊரார் ஓவராய் வீசிய வார்த்தைகள்... வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் பூஜா...!
என் தங்கையின் கலரை பலரும் சுட்டிக்காட்டி பேசியதால், அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை.
மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான "பிரேமம்" படத்தில் மலர் டீச்சராக சிறிது நேரமே வந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் சாய் பல்லவி.
தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி போட்ட ஆட்டம் இன்று வரை அடுத்தடுத்து யூ-டியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை இருக்கிறார். பார்க்க அச்சு, அசலாக சாய் பல்லவி போலவே இருப்பவர். அக்காவுடன் பூஜா எடுத்துக் கொள்ளும் பல புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவதால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதனிடையே பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தனது தங்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், தன்னை விட நான் தான் அழகாக இருப்பதாக என்னை தங்கை நினைக்கிறார். நான் அவரை விட நிறமாக இருப்பதால் அப்படி நினைக்கிறார். கண்ணாடியை பார்க்கும் போது எல்லாம் தன்னைப் பற்றியும், என்னுடைய அழகை பற்றியும் தான் பேசுவார்.
என் தங்கையின் கலரை பலரும் சுட்டிக்காட்டி பேசியதால், அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. அவள் சிறுமியாக இருக்கும் போது வெளியே வந்தாலே கிராமத்தினர் விளையாட போறீயா? ஏற்கனவே நீ கறுப்பு? என பலமுறை கூறியுள்ளனர். இதனால் சாய்பல்லவி தங்கை பூஜாவின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.