மகனின் 15வது பிறந்தநாளை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடிய ரோஜா... அசத்தல் போட்டோஸ்...!
மகன் கெளசிக்கின் 15வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள ரோஜா அதனை தன்னுடைய சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ரோஜா தன்னுடைய மகன், மகளுடன் இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
தற்போது மகன் கெளசிக்கின் 15வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள ரோஜா அதனை தன்னுடைய சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கணவர் ஆர்.கே.செல்வமணி, மகள் மற்றும் பிற உறவினர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக மகனின் பிறந்தநாளை தூள் கிளப்பி இருக்கிறார்.
15 வயதில் அடியெடுத்து வைக்கும் மகனுக்காக ஸ்பெஷல் பர்த்டே பார்ட்டியை ஏற்பாடு செய்த ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதி, அதில் முக்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
செல்ல மகனுடன் அம்மா ரோஜ
அக்காவின் அன்பு மழையில் பர்த் டே பாய் கெளசி
குடும்பத்துடன் சேர்ந்து குதூகல கொண்டாட்ட