குடும்பத்துடன் பீச்சில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை ரம்பா!
90'ஸ் நடிகை ரம்பா தற்போது தனது 3 பிள்ளைகள் மற்றும் கணவருடன் பீச்சில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actress Ramba
விஜயலட்சுமி என்னும் பெயரில் ஆந்திராவில் பிறந்த ரம்பா. முதலில் தெலுங்கில் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன் படத்தில் ஈஸ்வரியாக தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 'உள்ளத்தை அள்ளித்தா' வில் நாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
Actress Ramba
பின்னர் அர்ஜுனின் செங்கோட்டை படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ரம்பா நடித்திருந்தார். தமிழில் அடுத்தடுத்து கமிட் ஆகி வந்த ரம்பா வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்களை கொடுக்கும் ஹிட் நாயகியாக இருந்தார். 1999 ஆம் ஆண்டு 8 படங்களில் நடித்திருந்தார்.
Actress Ramba
2010 க்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்ட இவர், இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
Actress Ramba
தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அருண் விஜயின் யானை படத்தை சென்னையில் பார்த்த ரம்பாவின் பேட்டி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரம்பா தனது குடும்பத்துடன் பீச்சில் மகிழ்ந்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.