வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால்.. சன் டிவிக்கு திரும்பிய ராதிகா?
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஒரு தொடரில் தான் நாயகியாக நடிக்க உள்ளாராம் ராதிகா. இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Radhika Preethi
வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலங்கள் உருவாகின்றனர். ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். இதன் பொருட்டு சீரியல் ஆக்ட்ரஸ் பலரும் சீரியலில் இருந்து விலகி திரைத்துறை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
Radhika Preethi
முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் கண்ணம்மாவாக வரும் ரோஷினி ஹரிப்ரியனுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ஆனால் இவர் வெள்ளித்திரை ஆசையில் சீரியலில் இருந்து வெளியேறினார் என கூறப்பட்டது.. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடிக்கும் கட்டத்தில் சினிமா துறையை தேடி ரியலில் இருந்து விலகியஇவருக்கு இதுவரை திரையுலகில் வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. பின்னர் குக் வித் கோமாளி மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார் ரோஷினி.
Radhika Preethi
இவரை போலவே சன் டிவியில் பிரபலமான நாடகம் ஒன்றிலிருந்து விலகிய ராதிகா பிரீத்தி தற்போது மீண்டும் சன் டிவிக்கே வந்துள்ளார். இந்த தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த தொடர் தான் பூவே உனக்காக. இந்த தொடரில் நாயகியாக ராதிகாபிரீத்தி நடித்து வந்தார். இவருடன் துணை நாயகியாக ஜீவிதா லிவிங்ஸ்டன் தோன்றியிருந்தார். பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடரில் இருந்து முதலில் ஜீவிதா வெளியேறி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
Radhika Preethi
ஜீவிதாவை அடுத்து அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகாவும் விலகினார். ஒரு கட்டத்தில் ராதிகா கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதை அடுத்தே இவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் சமீபத்தில் தான் நிறைவுற்றது.
Radhika Preethi
இந்த தொடரின் மூலம் தான் ராதிகா ப்ரீத்தி மிகவும் பிரபலமானார். சமீபத்தில் தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் திரையுலக நாயகியானார். அதோடு கன்னட சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். ஆனால் தொடர் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது.
சரியான திரை உலக வாய்ப்புகள் அமையாததால் ராதிகா பிரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஒரு தொடரில் தான் நாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.