துபாய் நீச்சல் குளத்தில் குளியல்... பிரியா பவானி சங்கர் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்...!
பிரியா பவானி சங்கர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு தாறுமாறு வைரலாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.
எஸ்.ஏ.சூர்யாவின் “மான்ஸ்டர்” படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் “மாஃபியா” படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தனது போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது துபாய் சென்றுள்ள பிரியா பவானி சங்கர் அவர் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கண்ணில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்த படி குளு குளு குளியல் போடும் பிரியா பவானி சங்கரின் போட்டோஸ் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது.
சிலர் பார்க்க பில்லா நயன்தாரா மாதிரி இருக்கீங்க, செம்ம ஹாட், க்யூட் என பாராட்டு கமெண்ட் செய்தாலும், பலரும் இவ்வளவு நாள் நல்லாதானோ இருந்தீங்க இப்ப ஏன் கிளாமர் ரூட்டுக்கு போறீங்க என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.