நயன்தாரா - திரிஷா இந்திக்கு செல்லாததற்கு இதுதான் காரணமா? பாலிவுட் பிரபலங்களை வெளுத்து வாங்கிய நடிகை!
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து விட்டு பின், பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கிய நடிகை ஒருவர், பாலிவுட் திரையுலகத்தினர் தமிழ் நடிகைகள் என்றால் ஏளனமாக பார்ப்பதாக கூறி வெளுத்து வாங்கியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருந்தாலும், பாலிவுட் திரையுலகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுக்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருக்கிறது. ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு கூட கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
தமிழ் பட நடிகைகள் சில இந்தி திரையுலகத்தில் கவனம் செலுத்தினால் அவர்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவது சந்தேகமே. இதனால் தான் என்னவோ பல முன்னணி நடிகைகள் இதை திரையுலகத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகத்தில் இருந்து பாலிவுட் பக்கம் சென்ற நடிகை பாயல் கோஷ், பாலிவுட் திரையுலகினர் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகளை இளக்காரமாக பார்க்கிறார்கள் என்று அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழில் இவர் ‘தேரோடும் வீதியிலே’ என்ற படத்தில் நடித்தவர். இதை தொடர்ந்து ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார்.
சில பாலிவுட் படங்களின் வாய்ப்புகள் தேடி வர அதனை பயன்படுத்தி கொண்டு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் பாலிவுட் படங்களில் நடித்த போது, இவரிடம் சில நடிகர்கள் தமிழ், தெலுங்கில் நடித்து ஏன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறாய் என்றும், பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்து என்றும் கூறியதாக பாயல் கோஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
ஆனால் பாலிவுட் திரை உலகில் கவனம் செலுத்துவதைவிட தமிழ் தெலுங்கில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று இப்போது தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் ஹீரோயின்களை தெய்வமாக கருதுகிறார்கள் என்றும், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள் ஒருசில ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள் என்றும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு செல்லும் நடிகைகளை பாலிவுட் திரை உலகினர் இளக்காரமாக பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்