MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

1 Min read
Ganesh A
Published : Dec 07 2022, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை பார்வதி நாயர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், கடந்த அக்டோபர் மாதம், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைகடிகாரங்கள், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை திருடுபோனதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்தார்.

24

அதுமட்டுமின்றி தன் வீட்டில் வேலைபார்த்து வந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் தான் இதையெல்லாம் திருடிவிட்டதாகவும் அந்த புகார் மனுவில் பார்வதி குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பார்வதி கூறுவதெல்லாம் பொய் என்று கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஸ் சந்திரபோஸ், புகார் ஒன்றை அளித்திருந்தார். இவ்வாறு இருவரும் மாறி மாறி புகார் அளித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... என் கணவன் ஒரு சைக்கோ... அவரால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் - கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

34

இதனிடையே கடந்த மாதம் சுபாஷ் சந்திரபோஸ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்திருந்தார். இதையடுத்து நேற்று பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

44

இந்நிலையில், இன்று பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளரான சுபாஷை போலீசார் கைது செய்துள்ளனர். பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved