சிரஞ்சீவி குடும்பத்தில் அடுத்த விசேஷம்..! திருமணத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி நாயகி!
நடிகையும், சிரஞ்சீவியின் சகோதரர் நாகா பாபுவின் மகளுமான நிகாரிக்கா ஒரு சில தெலுங்கு படங்களிலும், தற்போது சில தமிழ் படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய திருமணத்தை உறுதி செய்துள்ளார்.
இதுதான் தன்னுடைய திருமணம் குறித்து நிகாரிகா வைத்துள்ள ட்விட்ஸ், அதாவது மிஸ் என்பதை அடித்து விட்டு மிஸ்ஸஸ் என எழுதியுள்ளார். இதனால் இவருக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகையும், சிரஞ்சீவியின் சகோதரர் நாகா பாபுவின் மகளுமான நிகாரிக்கா ஒரு சில தெலுங்கு படங்களிலும், தற்போது சில தமிழ் படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணத்தை உறுதி செய்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகை நிகாரிகா தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்து வரும், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' மற்றும் நடிகர் அசோக் செல்வன் நடித்து வரும் ரொமான்டிக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் நடித்த படங்கள், பெரிதாக கை கொடுக்கவில்லை என்பதால் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் படத்தை பெரிதாக நம்பியுள்ளார்.
இந்நிலையில் இவரும் , பிரபல நடிகர் பிரபாஸ்சும் காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இதனை இரு தரப்பை சேர்ந்தவர்களும் மறுத்து, இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்தனர்.
மேலும் ஏற்கனவே நிகாரிகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட தகவலும் வெளியானது.
இந்நிலையில் திடீர் என தன்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்களுக்கு சூசகமாக தெரிவிக்கும் விதத்தில் பேப்பர் கப் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து நிகாரிகாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.