- Home
- Cinema
- Nazriya Nazim: முழுமையாக மீண்டு வர இன்னும் சிறிது காலம் தேவை; மன்னிப்பு கேட்டு நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை!
Nazriya Nazim: முழுமையாக மீண்டு வர இன்னும் சிறிது காலம் தேவை; மன்னிப்பு கேட்டு நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை!
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும், சமூக வலைத்தளம் பக்கமும் வராமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி நடிகை நஸ்ரியா நஸீம் கூறியுள்ளார்.

நஸ்ரியாவின் படங்கள்:
தமிழில், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற சில படங்களில் நடித்தாலும், கோலிவுட் திரையுலகில் தற்போது வரை தனி ரசிகர்கள் கூட்டத்திற் வைத்திருப்பவர் நஸ்ரியா. மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், திரையுலகை விட்டு விலகிய நஸ்ரியா, கடந்த சில வருடங்களாக மீண்டும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சூட்சுமதர்ஷினி' படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.
Nazriya Statement:
நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை:
இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கும் மேல் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்தது ஏன் என்பது பற்றி விளக்கம் கொடுக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறி இருபதாவது.. "கடந்த சில மாதங்களாக உணர்வு ரீதியாக நான் நலமாக இல்லை. தனிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தேன். என் 30வது பிறந்தநாள், புத்தாண்டு, 'சூட்சுமதர்ஷினி' படத்தின் வெற்றி என பல நிகழ்வுகளைக் என்னால் உங்களுடன் கொண்டாட முடியவில்லை. நான் ஏன் சமூக ஊடகங்களில் இல்லை, ஏன் என்னை சார்ந்தவர்களின் அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவில்லை, என்பதை விளக்காததற்கு என் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேலை விஷயமாக என்னைத் தொடர்பு கொள்ள முயன்ற சக ஊழியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நடிச்சது நச்சுனு நாலு படம்; தன்னைவிட 12 வயது மூத்த நடிகருடன் கல்யாணம்! யார் இந்த நடிகை?
sookshmadarshini Film:
சூட்சுமதர்ஷினி படத்திற்காக விருது:
கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது சூட்சுமதர்ஷினி படத்திற்காக எனக்கு கிடைத்தது. இந்த அங்கீகாரத்திற்கு மிக்க நன்றி. இது கடினமான பயணம். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கிறேன். முழுமையாக மீண்டு வர இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம். ஆனால் நான் மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன்.
Nazriya Apologised:
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நஸ்ரியா:
நன் திடீர் என இப்படி செய்ததற்காக, என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அனைவரின் அன்பு. எல்லையற்ற ஆதரவுக்கு நன்றி", என்று நஸ்ரியா இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். இவர் தனக்கு என்ன பிரச்சனை என கூறாத நிலையில், ஒருவேளை மன ரீதியான பிரச்சனைகளை நஸ்ரியா சந்தித்திருக்கலாம் என ரசிகர்கள் அவரை தேற்றும் விதமாக பதிவு ஒன்றை போட்டு பாசத்தையும் வழிபாடுத்தி வருகிறார்கள்.
என்னெல்லாம் பொய் சொல்லிருக்க? தங்கமயிலை துருவி துருவி கேள்வி கேட்ட சரவணன்!