சொட்ட சொட்ட மழையில் நனைந்த படி... ஈரத்துணியுடன் அதுல்யா நடத்திய போட்டோ ஷூட் அதகளம்...!
ஈரத்துணியுடன் போஸ் கொடுத்திருக்கும் அதுல்யாவை பார்த்து மழையில் நனைத்த மல்லிகைப்பூவே என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
கோவை அழகியான அதுல்யாவின் குழந்தை தனம் மாறாத முகமும், குறும்புச் சிரிப்புமே பல ரசிகர்களை வசீகரம் செய்து வருகிறது.
பாவாடை தாவணி, புடவை, லெஹங்கா என வலம் வந்த அதுல்யா திடீரென கவர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டார். குட்டை ஸ்கர்ட், ஸ்லீவ் லெஸ் கவுன், இடை தெரிய உடை என இஷ்டத்துக்கு கவர்ச்சி கலவரமூட்டி வருகிறார்.
தற்போது ஸ்லீவ் லெஸ் வெள்ளை நிற கவுனில் வீட்டின் மொட்டை மாடியில் நின்ற படி அதுல்யா நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
கொட்டித்தீர்க்கும் மழையில் சொட்ட சொட்ட நனைத்த படி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அதுல்யா. மெல்லிய ஆடையில் அதுல்யா நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி ரூட்டிற்கு மாறி வரும் அதுல்யா இப்படி மழையில் நனைத்து பளீச் போஸ் கொடுப்பார் என ரசிகர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
ஈரத்துணியுடன் போஸ் கொடுத்திருக்கும் அதுல்யாவை பார்த்து மழையில் நனைத்த மல்லிகைப்பூவே என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.