ரண்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போஸ் கொடுத்த விஷ்ணு விஷால்..கடுப்பான நெட்டிசன்கள்!
விஷ்ணு விஷால் தற்போது பாலிவுட் நடிகர் போல நிர்வாண புகைப்படம் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்

Vishnu Vishal
வெற்றிகளுக்காக போராடி வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிற விஷ்ணு விஷால். வளர்ந்து வரும் நடிகரான இவர் வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்
Vishnu Vishal
முன்னதாக நீர்ப்பறவை படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதுகளை தட்டி சென்று இருந்தார் விஷ்ணு விஷால். இவரின் சமீபத்தை படமான எஃப் ஐ ஆர் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றிகளை பெற்றிருந்தது. இந்த படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..கவர்ச்சி கடலில் ஐஸ்வர்யா ராஜேஷ்..தொடை தெரிய கிழிந்த உடையில் கிக் போஸ் !
இதில் கௌதம் வாசுதேவ் மேனன் மஞ்சிமா மோகன் பிரபா மோனிகாசான் ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியான இந்த படம் 24 கோடி ரூபாயை வசூலாக பெற்று இருந்தது.
Vishnu Vishal
தற்போது மோகன்தாஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதற்கு இடையே இடையே குடும்ப சிக்கல்களிலும் மாட்டியிருந்த விஷ்ணு விஷால் முன்னாள் மனைவி ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்தபி பிறகு ஜவாலா குட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..முதல் இடம் சமந்தாவிற்கு மூன்றாம் இடம் நயனுக்கு ..பாலிவுட் நாயகிகளை பின்னுக்கு தள்ளிய ரகசியத்தை சொன்ன நாயகி!
Vishnu Vishal
இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் போன்று நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது மனைவி எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் பிரபல பத்திரிக்கையின் அட்டை பக்கத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பு இருந்த நிலைகளை, தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தற்போது பாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு நிர்வாண புகைப்படம் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.