பிறந்து 40 நாட்களே ஆன மகளின் போட்டோவை வெளியிட்ட நடிகர் சதீஷ்... லைக்குகளை குவிக்கும் அப்பா - மகள் பாசம்...!
நடிகர் சதீஷின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களோடு குட்டி பாப்பாவின் முகத்தையும் காட்டுங்கள் என கோரிக்கை வைத்து வந்தனர்.
பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சதீஷ்.
அடுத்தடுத்து விஜய், சிவகார்த்திகேயன் கூட்டணியில் சதீஷ் நடித்த அனைத்து படங்களுமே ஹிட்டாக முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
நடிகர் சதீஷுக்கும் சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கையான சிந்துவிற்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. வைபவ் நடித்த சிக்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இந்து முறைப்படி நடைபெற்ற சதீஷ் - சிந்து திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமணமாகி ஓராண்டுகள் ஆன நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதி தனக்கு மகள் பிறந்திருப்பதாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர்.
நடிகர் சதீஷின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களோடு குட்டி பாப்பாவின் முகத்தையும் காட்டுங்கள் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் செல்ல மகள் தனது ஆள்காட்டி விரலை இறுக்கமாக பற்றியிருக்கும் க்யூட் போட்டோ ஒன்றை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
குழந்தை பிறந்து 40 நாட்களுக்குப் பிறகு சதீஷ் வெளியிட்டுள்ள இந்த அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் அழகான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.