ஓட ஓட விரட்டும் கொரோனாவுக்கு நடுவே ராணா திருமணம்! இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? பல தகவல்கள் இதோ..
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், காதல் குறித்து இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
மே12ம் தேதி தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இதை மறுத்த ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ், எங்களது குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசும் “ரேகா” நிகழ்ச்சி தான் நடைபெற்றுள்ளது. அதற்காக தான் பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ராணா - மிஹீகா திருமணம் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நடைபெறதாக உள்ளதாக தகவல்கள்
வெளியாகின, ஆனால் தற்போது ஐதராபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறதாம். அதனால் திருமணத்தை எளிமையாக வீட்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சரி இவரிடம் எழுப்பப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்...
கேள்வி: உங்கள் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ் மற்றும் உங்கள் திருமணத்தைப் பற்றி சொல்லுங்கள்?
ராணா தகுபதி பதில்.. நான் வளர்ந்து வருகிறேன் என்று நினைக்கிறேன், திருமணம் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. எனது வருங்கால மனைவி மிஹீகா எனது வீட்டிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் வசிக்கிறார், நாங்கள் அதே அருகிலேயே இருக்கிறோம். அவள் அழகானவள், நாங்கள் ஒரு சிறந்த ஜோடியாக இருப்போம். அவர் என்னை அதிகம் ஈர்த்தார், எனவே அவர் தான் என் வாழ்க்கை என தீர்மானித்தேன். ஆகஸ்ட் 8 ஆம் தேதி நான் திருமணம் கொள்ள உள்ளோம். மிஹீகாவை திருமணம் செய்துகொள்வது எனது வாழ்க்கையின் சிறந்த நேரம் என்றே உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
OTT vs தியேட்டர் விவாதத்தில் உங்கள் எண்ணங்கள் என்ன?
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தளம் வெளிப்படும் போது, அது திறமைகளின் புதையல் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். OTT என்பது ஒரு கலைஞருக்கு ஜனநாயக இடமாகும், ஏனெனில் நீங்கள் விரும்பும் கதைகளைச் சொல்ல இது சுதந்திரம் அளிக்கிறது. இது திறமைகள் வெளிக்கொண்டு காட்டுகிறது. பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை, தியேட்டர்கள் அவற்றின் தேர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.
OTT vs தியேட்டர் விவாதத்தில் உங்கள் எண்ணங்கள் என்ன?
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தளம் வெளிப்படும் போது, அது திறமைகளின் புதையல் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். OTT என்பது ஒரு கலைஞருக்கு ஜனநாயக இடமாகும், ஏனெனில் நீங்கள் விரும்பும் கதைகளைச் சொல்ல இது சுதந்திரம் அளிக்கிறது. இது திறமைகள் வெளிக்கொண்டு காட்டுகிறது. பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை, தியேட்டர்கள் அவற்றின் தேர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.
வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுத்து குறித்து உங்கள் கருது?
வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தை மட்டுமே வைத்து ஒருவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது. உண்மையாக உழைத்தால் மட்டுமே சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உங்கள் அறிவுரை?
மக்களைக் கவனிப்பவராக இருங்கள். இது வாழ்க்கையையும் மக்களையும் புரிந்து கொள்வதிலிருந்து வருகிறது. மேலும், அவர்களின் உணர்ச்சிகளை நீங்கள் எதிரொலிக்க முடியுமா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் ஒரு சிறந்த நடிகராக மாறுகிறீர்கள். என கூறியுள்ளார் ராணா.