நடிகர் ராணாவை ஓட ஓட விரட்டும் கொரோனா... தீயாய் பரவும் தொற்றால் திருமண இடம் மாற்றம்?
நாள்தோறும் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா தொற்றால் பிரபல நடிகர் ராணாவின் திருமண இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்ற ராணா டகுபதி, பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்தார்.
இதனிடையே மே12ம் தேதி தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
టాలీవుడ్ మ్యాన్లీ హంక్ రానా దగ్గుబాటి త్వరలో పెళ్లి పీటలెక్కనున్న సంగతి తెలిసిందే. చాలా కాలంగా పెళ్లి మాటను వాయిదా వేస్తూ వచ్చిన ఈ యంగ్ హీరో ఇటీవల తన మనసుకు నచ్చిన అమ్మాయిని కుటుంభ్యులకు, అభిమానులకు పరిచయం చేశాడు. హైదరాబాద్కే చెందిన మిహీకా బజాజ్ను పెళ్లాడబోతున్నాడు రానా.
இதை மறுத்த ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ், எங்களது குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசும் “ரேகா” நிகழ்ச்சி தான் நடைபெற்றுள்ளது. அதற்காக தான் பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ராணா - மிஹீகா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ராணா - மிஹீகா திருமணம் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நடைபெறதாக உள்ளதாக தகவல்கள்
வெளியாகின
ஆனால் தற்போது ஐதராபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்து
வருகிறதாம். அதனால் திருமணத்தை எளிமையாக வீட்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் தற்போது ஐதராபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்து
வருகிறதாம். அதனால் திருமணத்தை எளிமையாக வீட்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ராணாவின் வீட்டில் நடைபெற உள்ள திருமணத்தில் நெருங்கிய
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு என்று
கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும்
இருவீட்டாரும் வெளியிடவில்லை.