நடிகர் நகுல் மனைவிக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்...!
“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.
தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நகுல் வீட்டில் சமீபத்தில் நடந்த விசேசம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“பாய்ஸ்” படத்தில் ஜுஜு என்ற பெயரில் வித்தியாசமான கெட்டப்பில் குண்டாக நடித்த நகுலின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சரியான ஹிட் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நகுல், எரியும் கண்ணாடி என்ற படம் மூலம் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தேன் படத்தில் இணைந்த நகுல், சுனைனா ஜோடி இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது.
நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து கூறினர்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் கணவன், மனைவி இருவரும் அவ்வப்போது தங்களுடைய போட்டோஸை இன்ஸ்டாகிராமை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 15ம் தேதி தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் நகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பான பர்த்டே டிரீட் கொடுத்தார்
தனது மனைவி கர்ப்பமாக இருப்பதையும், தான் விரைவில் அப்பாவாகப் போவதையும் மிகவும் மகிழ்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து சோசியல் மீடியாவில் நகுல் - ஸ்ருதி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் ஸ்ருதிக்கு அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் வளைகாப்பு நடந்துள்ளது. அதில் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
எனது மாமனார், மாமியார் வீட்டில் கடந்த வாரம் சிறிய வளைகாப்பு நடைபெற்றது. அதில் நாங்கள் மற்றும் நாய்/பூனை ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டோம்.
ஊலா (நாய்) வழக்கம்போல போட்டோவுக்கு போஸ் கொடுக்க வெட்கப்படவில்லை, ஆனால் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பிரேம் உள்ளே கொண்டுவர முடியவில்லை. ஆனால் நாங்கள் போட்டோ எடுக்கும்போது பின்னால் மட்டுமே வந்து போட்டோவை செய்து இருந்தது" என நகுல் தெரிவித்துள்ளார்.