MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவரே நீங்களுமா? ஹாலிவுட் படத்தால் இன்ஸ்பயரான MGR - 25 வாரம் ஓஹோவென ஓடிய படம் பற்றி தெரியுமா?

தலைவரே நீங்களுமா? ஹாலிவுட் படத்தால் இன்ஸ்பயரான MGR - 25 வாரம் ஓஹோவென ஓடிய படம் பற்றி தெரியுமா?

Actor MGR : தமிழ் திரையுலகை பொறுத்தவரை மிகப்பெரிய புகழோடு வலம்வந்த ஒரே நடிகராக திகழ்பவர் தான் மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி. ராமசந்திரன்.

3 Min read
Ansgar R
Published : Sep 12 2024, 06:07 PM IST| Updated : Sep 12 2024, 10:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor MGR

Actor MGR

இலங்கையில் பிறந்து சிறு வயதிலேயே தனது தந்தையையும், சகோதரியையும் இழந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அவரது அண்ணன் சக்கரவாணி மற்றும் தாயோடு மீண்டும் இந்தியா திரும்பினார். கேரளாவை பூர்விகமாக கொண்ட அவருடைய தாய், தனது சொந்த ஊருக்கு சென்ற பொழுது அங்கு அவருடைய உறவினர்கள் அவருக்கு உதவ மறுத்துவிடுகின்றனர். இந்த சமயத்தில் நான் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்த வேலு நாயர் அவரது குடும்பத்திற்கு உதவ முன்வருகிறார். 

அதன் பிறகு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமா தனது இரண்டு மகன்களையும் பள்ளியில் சேர்க்கிறார். கும்பகோணத்தில் தனது இளமை பருவத்தை கழித்த எம்ஜிஆர், சிறுவயது முதலிலேயே கலைத்துறையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்து வருகின்றார். "பாய்ஸ் கம்பெனி" என்கின்ற டிராமா குரூப்பில் இணைந்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்குகிறார். மெல்ல மெல்ல நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற எம்ஜிஆர் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளியான "சதி லீலாவதி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து நடிகனாக கலை உலகில் களம் இறங்குகிறார்.

பாதி பாட்டு வெஸ்டர்ன்.. மீதி பாட்டு போக்.. ரஜினிக்காக புதிய முயற்சி - வாலியை அசர வைத்த இளையராஜா!

24
MG Ramachandran

MG Ramachandran

சுமார் 15 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு பிறகு கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் என்கின்ற திரைப்படம் எம்ஜிஆரின் புகழை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். அடுத்த 30 ஆண்டுகள் தமிழ் திரை உலகை நடிகனாக ஆண்டது அவர் மட்டுமே என்றால் அது நிச்சயம் மிகையல்ல. 

"நான் ஆணையிட்டால்", "நாடோடி", "தாலி பாக்கியம்", "தனிப்பிறவி" பெற்றால் தான் பிள்ளையா", "அரசகட்டளை", "தேர் திருவிழா", "குடியிருந்த கோவில்", "ஒளிவிளக்கு", மற்றும் "அடிமைப்பெண்" என்று எம்.ஜி.ஆர் தொட்டது எல்லாமே ஹிட்டானது. கடந்த 1971ம் ஆண்டு வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

34
politician MGR

politician MGR

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், திரைத்துறையில் பல சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபன்" என்கின்ற திரைப்படத்திற்காக உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு ஷூட்டிங் எடுத்து, தமிழ் திரை உலகில் வெளியான முதல் வெளிநாட்டில் உருவான படம் என்கின்ற பெருமையை பெற்றார் எம்ஜிஆர். 

இந்த திரைப்படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவமும் உண்டு, முதலில் இந்த திரைப்படத்திற்கு, வாலி நான் அனைத்து பாடல்களையும் எழுதுவதாக இருந்தது. ஆனால் ஒரு நாள் வாலியை கலாய்க்க நினைத்த எம்.ஜி.ஆர், இந்த திரைப்படத்தில் நீங்கள் பாடல்கள் எழுதவில்லை. உங்களுக்கு பதிலாக வேறு ஒருவர் எழுதுகிறார் என்று சொல்லி அவரிடம் வம்பிழுத்துள்ளார். அப்போது ஜாலியாக பேசிய வாலி, என்னுடைய பாடல் இந்த திரைப்படத்தில் இல்லை என்றாலும், என் பெயர் இல்லாமல் இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். 

வியந்து போன எம்ஜிஆர், எப்படி என்று கேட்க, உங்கள் படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்" தான், அதில் வாலியை எடுத்து விட்டால், "உலகம் சுற்றும் பன்" என்று பெயர் வைத்தா ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்க, மகிழ்ச்சியாக அவரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாராம் எம்ஜிஆர்.

44
Come September

Come September

இதற்கிடையில் கடந்த 1966ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏசி திருலோக சந்தர் இயக்கத்தில், எம்ஜிஆர் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "அன்பே வா". ஆனால் உண்மையில் கடந்த 1961ம் ஆண்டு ஹாலிவுட் உலகில் வெளியான "கம் செப்டம்பர்" என்கின்ற திரைப்படத்தை தழுவி தான் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பிறமொழி திரைப்படங்களை தழுவி படம் எடுப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் திருலோகச்சந்தர் எம்.ஜி.ஆரை வைத்து அப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார். 

அது மட்டும் அல்ல "அன்பே வா" திரைப்படம் சுமார் 26 வாரங்கள் திரையில் ஓடி மெகா ஹிட் சாதனை படமாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் பாலு என்கின்ற கதாபாத்திரத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பணக்கார மனிதர் தனிமையில், எளிமையாக வாழ விரும்பினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான படம். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், கட்சிகளும் ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையாக உள்ளது.

நடிப்பா இருந்தாலும் மனசாட்சி வேண்டாமா? சொந்த தங்கைக்கே காதலனாக நடித்த பிரபல நடிகர்?

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved