“ரவுடி பேபி” பாடல் மூலம் தனுஷ் சம்பாதித்தது இத்தனை கோடியா?... சத்தமே இல்லாமல் கசிந்த ரகசியம்...!
பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 96 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.
நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது. இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது.
பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 96 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைகளை கொண்ட பாடல் என்னும் சாதனைய படைத்திருக்கிறது “ரவுடி பேபி”.
இந்நிலையில் இந்த பாடல் மூலமாக யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து தனுஷிக்கு 8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த பாடலில் பணியாற்றி கலைஞர்களுக்கு விருந்து வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.