MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Cinema : இன்று கிடைக்காத 5 பழைய தமிழ் படங்கள்! அவை எங்கே போயின தெரியுமா?

Cinema : இன்று கிடைக்காத 5 பழைய தமிழ் படங்கள்! அவை எங்கே போயின தெரியுமா?

Cinema : தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தும் இன்று முழுமையாகப் பார்க்க முடியாத பழைய படங்கள் இருக்கின்றன. முதல் தமிழ் பேசும் படம், வெற்றிப் படம் என பல திரைப்படங்களின் பிரிண்ட்கள் காலப்போக்கில் காணாமல் போயுள்ளன. அவற்றின் பின்னணி இதோ!

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Sep 17 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மறைந்து போன வரலாறு!
Image Credit : Chatgpt

மறைந்து போன வரலாறு!

தமிழ் சினிமாவுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இருக்கிறது. ஆனால் அந்த வரலாற்றின் ஒரு பகுதியை இன்று நம்மால் திரையில் பார்க்கவே முடியாது என்பது ஆச்சரியமான உண்மை.

பழைய திரைப்படங்களை பாதுகாக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது, திரைப்படச் சுருள்கள் சேதமடைந்தது, பிரதிகள் அழிக்கப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களால் ஏராளமான படங்கள் காணாமல் போயுள்ளன. 1931 முதல் 1940 வரை மட்டும் தமிழில் குறைந்தது 249 படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 14 படங்கள் மட்டுமே இன்றும் இருப்பதாக திரைப்பட வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படி இன்று நம்மால் முழுமையாகப் பார்க்க முடியாத சில முக்கியமான தமிழ் படங்களைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : Land : இன்று ஒரு சென்ட் நிலம் வாங்கினால் 10 வருஷத்துல எவ்வளவு மதிப்பு வரும்? வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. கீசக வதம் (1916) - தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலேயே காணாமல் போன படம்!
Image Credit : Gemini AI

1. கீசக வதம் (1916) - தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலேயே காணாமல் போன படம்!

தமிழ் சினிமாவின் ஆரம்ப வரலாற்றில் மிக முக்கியமான பெயர் ‘கீசக வதம்’. ஆர். நடராஜ முதலியார் இயக்கிய இந்த மௌனத் திரைப்படம் 1916-ல் உருவானது. தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மௌனத் திரைப்படமாகவும், நடிகர்கள் தமிழர்களாக இருந்ததால் முதல் தமிழ் மௌனப் படமாகவும் இது கருதப்படுகிறது. அப்போது திரைப்படங்களை இன்றுபோல் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் நடைமுறை இல்லை. இதனால் கீசக வதத்தின் திரைப்படச் சுருள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் உள்ள தனியார் சேகரிப்பில் இந்தப் படத்தின் பிரிண்ட் இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் விசாரித்தபோது அந்தச் சேகரிப்பாளரிடம் படத்தின் பிரிண்ட் இல்லை என்பது தெரியவந்தது. அதாவது, தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தையே நம்மால் இன்று திரையில் பார்க்க முடியாத நிலை.

இதையும் படிங்க : EPF : ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்ந்த PF சம்பள வரம்பு! யாருக்கு என்ன பயன்?

36
2. காளிதாஸ் (1931) - தமிழில் முதன்முறையாக பேசிய படம்!
Image Credit : Chatgpt

2. காளிதாஸ் (1931) - தமிழில் முதன்முறையாக பேசிய படம்!

தமிழ் சினிமா மௌனப் படங்களிலிருந்து பேசும் படங்களாக மாறியபோது வரலாறு படைத்த திரைப்படம் ‘காளிதாஸ்’. 1931-ல் வெளியான இந்தப் படம் பொதுவாக முதல் தமிழ் பேசும் திரைப்படமாக குறிப்பிடப்படுகிறது.

இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு அருகில் வந்துவிட்ட இந்தப் படத்தை நாம் முழுமையாகப் பார்க்க முடியாது. அதன் திரைப்படப் பிரிண்ட்டும், ஒலிப்பதிவும் கூட உயிருடன் இருப்பதாகத் தெரியவில்லை. சில புகைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பாடல் புத்தகம் தொடர்பான தகவல்கள் மட்டுமே வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? தமிழில் சினிமா பேசத் தொடங்கிய அந்த முதல் படமே இன்று நம்மிடம் இல்லை.

இதையும் படிங்க : Astrology : செப்.26-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்! பணம், பதவி என அடுத்த லெவலுக்கு செல்லும் 5 ராசிகள்!

46
3. மின்னல்கொடி (1937) - வெற்றி பெற்றும் காணாமல் போன படம்!
Image Credit : Gemini AI

3. மின்னல்கொடி (1937) - வெற்றி பெற்றும் காணாமல் போன படம்!

1937-ல் வெளியான ‘மின்னல்கொடி’ திரைப்படம் இயக்குநர் கே. அமர்நாத் இயக்கிய அதிரடி திரைப்படம். கே.டி. ருக்மணி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் அப்போது வணிக ரீதியாக வெற்றி பெற்றதாக திரைப்பட வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் வெற்றி ருக்மணியின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் இன்று அந்தப் படத்தின் ஒரு முழுமையான பிரிண்ட்கூட இருப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பழைய திரைப்படங்களின் நிலையை நமக்கு உணர்த்துகிறது. ஒரு படம் வெற்றி பெற்றாலே அது என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று அப்போது உத்தரவாதம் இல்லை. திரைப்படச் சுருள்களை சரியாகப் பாதுகாக்காதது, காலப்போக்கில் அவை சேதமடைந்தது போன்ற காரணங்களால் இப்படங்கள் வரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமே மாறிவிட்டன.

இதையும் படிங்க : House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!

56
4. மூன்று பிள்ளைகள் (1952) – தோல்வியால் அழிக்கப்பட்ட பிரதிகள்!
Image Credit : Gemini AI

4. மூன்று பிள்ளைகள் (1952) – தோல்வியால் அழிக்கப்பட்ட பிரதிகள்!

இந்தப் படத்தின் கதை மற்றவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. 1952-ல் ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ். வாசன் தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ திரைப்படம் வெளியானது. நாகேந்திர ராவ் இயக்கிய இப்படத்தில் கண்ணாம்பா, நாகேந்திர ராவ், எம்.கே. ராதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் ‘முக்குரு கொடுகுலு’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. திரைப்பட வரலாற்று குறிப்புகளின்படி, படத்தின் தோல்விக்குப் பிறகு எஸ்.எஸ். வாசன் அதன் பிரதிகளை அழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ‘மூன்று பிள்ளைகள்’ இன்று காணாமல் போன திரைப்படமாகக் கருதப்படுகிறது. ஒரு திரைப்படம் தோல்வியடைந்ததால் அதன் பிரதிகளே அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.

இதையும் படிங்க : Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!

66
5. மிஸ் மாலினி (1947) - ஆர்.கே. நாராயணன் கதை எழுதிய படம்
Image Credit : Chatgpt

5. மிஸ் மாலினி (1947) - ஆர்.கே. நாராயணன் கதை எழுதிய படம்

1947-ல் வெளியான ‘மிஸ் மாலினி’ தமிழ் சினிமா வரலாற்றில் பல காரணங்களுக்காக முக்கியமான படம். கொத்தமங்கலம் சுப்பு இயக்கிய இந்தப் படத்தின் கதையை மால்குடி டேஸ் என்ற நாவலால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் எழுதியிருந்தார். மேலும், பின்னாளில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆரம்பகாலப் படங்களில் இதுவும் ஒன்று. அவருடைய மனைவி புஷ்பவல்லிதான் இந்தப் படத்தின் கதாநாயகி. புகழ்பெற்ற ஹிந்தி திரையுலக நட்சத்திரம் ரேகாவின் அம்மாதான் இந்த புஷ்பவல்லி.

ஆனால் இன்று ‘மிஸ் மாலினி’யின் முழுமையான திரைப்படப் பிரிண்ட் கிடைக்கவில்லை. இந்தப் படத்தை தேடி திரைப்பட ஆர்வலர்கள் விசாரித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இணையத்தில் இதன் பிரதியை யாராவது வைத்திருக்கிறார்களா என்ற தேடலும் நடந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இன்று படத்தின் பாடல்கள், சில புகைப்படங்கள், பழைய விளம்பரங்கள் போன்ற தடயங்கள் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. அதாவது, ஆர்.கே. நாராயணன் கதை எழுதிய ஒரு தமிழ் திரைப்படத்தை இன்று முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்த ஐந்து படங்கள் மட்டுமல்ல. பழைய தமிழ் சினிமாவின் ஏராளமான திரைப்படங்கள் காலப்போக்கில் காணாமல் போயுள்ளன. 1930கள் மற்றும் 1940களில் வெளியான பல திரைப்படங்களின் பிரிண்ட்கள் இன்று இல்லை என்று திரைப்பட வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். இது சினிமா வரலாற்றின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்று!

இதையும் படிங்க : Almond Roti : பாதாம் மாவுல சப்பாத்தி சாப்பிட்டு இருக்கீங்களா? சாப்பிட்டா அப்புறம் விட மாட்டீங்க!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilayaraja music vs Kamal: எம்ஜிஆர் பாட்டு மெட்டை புது பாட்டாக்கிய இளையராஜா.! சூப்பர் ஹிட்டான கமல் படத்தின் பாடல் எது தெரியுமா?
Recommended image2
Suriya Jyotika Record : விஜய் - அஜித் நட்பின் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய சூர்யா - ஜோதிகாவின் காதல்...!
Recommended image3
Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved