MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Business
  • EPF : ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்ந்த PF சம்பள வரம்பு! யாருக்கு என்ன பயன்?

EPF : ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்ந்த PF சம்பள வரம்பு! யாருக்கு என்ன பயன்?

EPF : கட்டாய EPF வரம்பு மாதம் ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் கூடுதல் ஊழியர்கள் EPF, ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பலன்களின் கீழ் வர உள்ளனர்.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Sep 16 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.15,000 டூ ரூ.25,000: என்ன மாற்றம்?
Image Credit : Chatgpt

ரூ.15,000 டூ ரூ.25,000: என்ன மாற்றம்?

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கியமான மாற்றம் வந்துள்ளது. EPFO-வில் கட்டாயமாக சேருவதற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்த தகவலின்படி, இந்த மாற்றத்தால் சுமார் 51 லட்சம் கூடுதல் ஊழியர்கள் EPFO சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்குள் வருவார்கள். இதற்கான மாற்றம் செப்டம்பர் 17, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Rainbow : வானவில் ஏன் எப்போதும் வளைந்து தெரியுது? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வாங்குறவங்களுக்கு என்ன பயன்?
Image Credit : Asianet News

ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வாங்குறவங்களுக்கு என்ன பயன்?

இதுவரை புதிய ஊழியர் ஒருவர் மாதம் ரூ.15,000-க்கும் அதிகமான சம்பளம் பெறும்போது, குறிப்பிட்ட விதிகளின் கீழ் அவர் கட்டாய EPF வரம்புக்கு வெளியே இருக்கக்கூடிய நிலை இருந்தது. இப்போது அந்த வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதால், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலான சம்பளப் பிரிவில் இருக்கும் பல புதிய ஊழியர்கள் EPF சமூகப் பாதுகாப்புக்குள் வருவார்கள். இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு, ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஊழியர் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு விரிவடையும்.

இதையும் படிங்க : Astrology : செப்.26-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்! பணம், பதவி என அடுத்த லெவலுக்கு செல்லும் 5 ராசிகள்!

Related Articles

Related image1
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Related image2
Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!
36
அப்படின்னா சம்பளம் வாங்குற எல்லாருக்கும் PF அதிகமாக பிடிக்குமா?
Image Credit : ChatGPT

அப்படின்னா சம்பளம் வாங்குற எல்லாருக்கும் PF அதிகமாக பிடிக்குமா?

இங்குதான் ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கணும். ரூ.25,000 என்பது உங்கள் சம்பளத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய உச்சவரம்பு கிடையாது. இது EPF-ல் கட்டாயமாக சேர்க்கப்படுவதற்கான சம்பள வரம்பு. அதாவது, ஒருவர் ரூ.18,000 அல்லது ரூ.22,000 சம்பளம் பெறுகிறார் என்பதற்காக அவருடைய சம்பளம் ரூ.25,000 ஆக மாறாது. அதேபோல், இந்த அறிவிப்பு எல்லா ஊழியர்களின் கையிருப்பு சம்பளத்திலும் ஒரே மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. அவருடைய சம்பளம், ஏற்கனவே உள்ள EPF உறுப்பினர் நிலை மற்றும் பொருந்தும் விதிமுறைகளைப் பொறுத்தே பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

இதையும் படிங்க : AI Video : லட்சங்களில் வருமானம் தரும் AI வீடியோக்கள்! எப்படி உருவாக்குறாங்க தெரியுமா? நீங்களும் உருவாக்கலாம்!

46
PF மட்டுமல்ல.. ஓய்வூதியம், காப்பீடும் கிடைக்குமா?
Image Credit : Gemini AI

PF மட்டுமல்ல.. ஓய்வூதியம், காப்பீடும் கிடைக்குமா?

இந்த மாற்றத்தின் முக்கியமான பலன் வெறும் PF சேமிப்பு மட்டும் அல்ல. EPFO சமூகப் பாதுகாப்புக்குள் வரும் தகுதியான ஊழியர்களுக்கு EPS மூலம் ஓய்வூதியப் பாதுகாப்பும், EDLI மூலம் காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைக்கும். அதாவது, புதிய சம்பள வரம்பு மூலம் கூடுதல் ஊழியர்கள் சேமிப்பு + ஓய்வூதியம் + காப்பீடு ஆகிய சமூகப் பாதுகாப்பு அமைப்புக்குள் வருவதுதான் முக்கியமான மாற்றம். இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை.

இதையும் படிங்க : House Construction : 1000 சதுர அடியில் மாடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு விவரம் இதோ!

56
ஏற்கனவே PF வாங்குறவங்களுக்கு என்ன மாற்றம்?
Image Credit : Gemini AI

ஏற்கனவே PF வாங்குறவங்களுக்கு என்ன மாற்றம்?

ஏற்கனவே EPF உறுப்பினராக இருந்து வருபவர்களுக்கு “ரூ.15,000 வரம்பு ரூ.25,000 ஆகிவிட்டதால் PF பணம் திடீரென அதிகரிக்கும்” என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், இதுவரை கட்டாய EPF பாதுகாப்புக்குள் வராத ரூ.15,000–ரூ.25,000 சம்பளப் பிரிவில் உள்ள கூடுதல் ஊழியர்களை சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்குள் கொண்டு வருவதுதான். எனவே ஏற்கனவே PF பிடித்தம் செய்யப்பட்டு வரும் ஊழியர்களுக்கு, இந்த மாற்றத்தின் தாக்கம் அவர்களின் தனிப்பட்ட சம்பளம் மற்றும் பொருந்தும் EPF விதிகளைப் பொறுத்தே இருக்கும்.

இதையும் படிங்க : Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!

66
செப்.17 முதல் அமல்.. 51 லட்சம் பேருக்கு பலன்!
Image Credit : Asianet News

செப்.17 முதல் அமல்.. 51 லட்சம் பேருக்கு பலன்!

2014-ல் ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட EPF கட்டாயச் சம்பள வரம்பு, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் தகவல்படி, இந்த மாற்றத்தால் சுமார் 51 லட்சம் ஊழியர்கள் கூடுதலாக பயன் பெறுவார்கள். இதற்காக அரசின் செலவு சுமார் ரூ.11,339 கோடி என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் புதிய ஊழியர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டிய முக்கியமான மாற்றம் இது. உங்கள் சம்பளத்தில் எவ்வளவு PF பிடிக்கப்படும் என்பது தனிப்பட்ட சம்பளம் மற்றும் பொருந்தும் விதிமுறைகளைப் பொறுத்தது.

இதையும் படிங்க : Vakra Maha Yoga : சுக்கிரன்-புதன் வக்கிர சங்கமத்தால் உருவாகும் வக்கிர மகா யோகம்! டாப் லெவலுக்கு செல்லும் 4 ராசிகள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business: வீட்டில் இருந்தே தொழில் தொடங்கலாம்.! மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
Recommended image2
Smart Work: தினமும் ரூ.3 ஆயிரம் சம்பாதிக்லாம் ஈசியா.! கீரை சாகுபடி - விற்பனையில் மறைந்திருக்கும் லட்சம் ரூபாய் வருமானம்.!
Recommended image3
Gold Investment: நடுத்தர மக்கள் எப்போது தங்கம் வாங்கலாம் தெரியுமா?! யாருக்குமே தெரியாத சூப்பர் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved