30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்..! மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..!
பிரபல இளம் நடிகை ஒருவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோய்யால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ள செய்தி, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் அவரின் கடைசி பதிவு இதயத்தை உலுக்கும் விதத்தில் உள்ளது.
பல ஹிந்தி மொழி, சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா சௌக்ஸி. இது தான் அவருடைய ஃபேவரைட் புகைப்படம் என அவர் கடைசியாக இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளது.
தொலைக்காட்சியை தொடர்ந்து ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் பிரபலமானவர்.
இவருக்கு கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திவ்யா காலமானார்.
இவர் இறப்பதற்கு முன், தன்னுடைய ரசிகர்களுக்கு மிகவும் எமோஷனல் மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
'நான் சொல்ல நினைப்பதை எல்லாம் பேச, வார்த்தைகள் பத்தாது. பல மாதங்களாக ரசிகர்கள் எனக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இப்போது நான் இதை சொல்ல வேண்டிய நேரம். நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன். நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்த கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye'' என பதிவிட்டுள்ளர். இந்த ட்விட் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையே உலுக்கியுள்ளது.
அவர் எப்படி பட்ட வலி வேதனைகள் அனுபவித்திருக்க வேண்டும் என, பலர் கண்கலங்கியபடி தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து திரையுலகில் மரண சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், 30 வயது இளம் நடிகையின் இந்த மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.