MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.3000 செலுத்தினால் போதும்! சுங்கச் சாவடிகளில் இலவசமாகவே பயணிக்கலாம்.! எப்படி தெரியுமா.?

ரூ.3000 செலுத்தினால் போதும்! சுங்கச் சாவடிகளில் இலவசமாகவே பயணிக்கலாம்.! எப்படி தெரியுமா.?

மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, ரூ.3000 செலுத்தி வருடாந்திர டோல் பாஸ் பெற்று, 200 பயணங்கள் வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 18 2025, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
சுங்க கட்டணம் எனும் பெரும் சுமை
Image Credit : Gemini

சுங்க கட்டணம் எனும் பெரும் சுமை

நாடுமுழுவதும் சாலை சுங்கச் சாவடிகள் (Toll Plazas) மூலம் ஏராளமான வருமானம் பெற்று வருகிறது மத்திய அரசு. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் FASTag பயன்படுத்தி தங்களின் சுங்க கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. இந்த FASTag கட்டாயம் ஏற்பட்ட பிறகு, சுங்கச் சாவடிகளில் நேரம் மற்றும் வரிசை குறைந்ததோடு, அரசுக்கும் பெரும் வருமானம் கிடைத்துவருகிறது.

29
புதிய வருடாந்திர டோல் பாஸ் திட்டம்
Image Credit : Google

புதிய வருடாந்திர டோல் பாஸ் திட்டம்

இந்தியாவிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை  சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துதல். கடந்த சில ஆண்டுகளில் டோல் கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, பொதுமக்கள் மீது பெரும் சுமையாகி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில், மத்திய அரசு தற்போது ஒரு புதிய வருடாந்திர டோல் பாஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

Related Articles

Related image1
இவர்கள் டோல் பிளாசாக்களில் சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை.. யார் எல்லாம் தெரியுமா?
Related image2
டோல் கேட்களை தவிர்த்து பயணம் செய்ய உதவும் கூகுள் மேப்ஸ்..!
39
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
Image Credit : Google

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஒருமுறை ரூ.3000 கட்டினால், பயணிகள் 1 வருடம் முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டணமின்றி பயணிக்க முடியும். இது தனியார் பயன்பாட்டிற்கான கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். மிகவும் எளிமையான முறையில், பயணங்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுவது FASTag வாயிலாக நடைபெறும். இத்திட்டத்தில் பதிவு செய்த வாகனத்திற்கு, FASTag மூலம் இயங்கும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி அனுமதி வழங்கப்படும்.

49
இந்த பாஸ் திட்டம் எப்படி செயல்படுகிறது?
Image Credit : Google

இந்த பாஸ் திட்டம் எப்படி செயல்படுகிறது?

ரூ.3000க்கு ஒரு வருட பாஸ் – ஒரே கட்டணத்தில் ஒரு வருடம் முழுவதும் பயணிக்க அனுமதி வழங்கப்படும். 200 பயணங்கள் வரை கட்டணமின்றி செல்லலாம், அந்த 200 பயணங்கள் முடிந்தவுடன், வழக்கமான கட்டணம் மீண்டும் அமலில் வரும், FASTag கட்டாயம் – பயணங்களை கணக்கீடு செய்வதற்கு இது தேவை எனபதை கவனத்தில் கொள்ள வேண்டும்

59
யாரெல்லாம் பயனடைவார்கள் தெரியுமா?
Image Credit : Google

யாரெல்லாம் பயனடைவார்கள் தெரியுமா?

இந்த திட்டம் நிலையானமாக தனிப்பட்ட பயணங்கள் செய்யும் நபர்களுக்கு, குறிப்பாக வாரந்தோறும் அல்லது தினசரி நகரங்களுக்கு இடையில் பயணிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பம் மாதத்திற்கு 15 – 20 முறை ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறார்கள் என எடுத்துக்கொண்டால், ஆண்டு முடிவில் சுமார் ரூ.15,000 – ரூ.20,000 வரை டோல் கட்டணம் செலவாகும். ஆனால் இப்போது, ரூ.3000 மட்டுமே செலுத்தினால் போதும். இதனால் டோல் கட்டண செலவு வெகுவாக குறைகிறது.

69
பதிவு செய்யும் முறை
Image Credit : stockphoto

பதிவு செய்யும் முறை

இந்த பாஸ் திட்டம் FASTag வழங்கும் வங்கிகள் மூலமாகவோ, அல்லது நாடாளுமன்ற நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இணையதளம் வழியாகவோ பெறலாம். பதிவு செய்யும்போது, வாகன பதிவு எண், FASTag ID, பயனர் விபரங்கள் (மொபைல் எண், அடையாளங்கள்) ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.

79
திட்டத்தின் நன்மைகள்
Image Credit : Google

திட்டத்தின் நன்மைகள்

இத்திட்டம் செலவுகளைப் பெரிதும் குறைக்கும், ஆண்டுக்கு 200 பயணங்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க முடியும், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் செல்லுபடியாகும்: தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் இதனை பயன்படுத்தலாம், வாகன ஓட்டிகள், குடும்பங்கள் மற்றும் மெடிக்கல் பயணிகள் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும், FASTag மூலம் முழுமையாக கண்காணிக்கப்படும், எனவே தவறான பயன்பாடு தடுக்கப்படும்

89
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
Image Credit : iSTOCK

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்த பாஸ் வணிக வாகனங்களுக்கு பொருந்தாது, 200 பயணங்களை கடந்தவுடன், வழக்கமான டோல் கட்டணம் வசூலிக்கப்படும், பாஸ் பெறும் வாகனம் மற்றொரு நபருக்கு மாற்ற முடியாது, ஒரு வாகனத்திற்கு மட்டும் பாஸ் அனுமதி – அதாவது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

99
குறையும் செலவு
Image Credit : Getty

குறையும் செலவு

இந்த வருடாந்திர டோல் பாஸ் திட்டம், நாடுமுழுதும் தனியார் வாகன பயணிகளுக்கான ஒரு பெரிய நிவாரணமாக அமையும். செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், நெடுஞ்சாலை பயணங்களை ஊக்குவிக்கும் திட்டமாகவும் இது விளங்கும். இந்த திட்டத்தின் மூலம், அரசு மற்றும் பயணிகள் இருவருக்கும் நன்மை ஏற்படும். பயணிகள் செலவுகளை மிச்சப்படுத்த முடியும், அதே சமயம் அரசு டிஜிட்டல் கட்டண வசூலியின் விஸ்தரத்தை விரிவுபடுத்த முடியும்.இதனை பயன்படுத்த, அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களும் விரைந்து பதிவு செய்து, பயணங்களை சீராகவும் செலவில்லாமல் மேற்கொள்ளலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
இந்தியா
ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக் புதிய விதிகள்
ஃபாஸ்டேக் விதிகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved