MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மொபைல் பேங்கிங் பயனர்களுக்கான Red அலர்ட்.! உங்கள் பணத்தை காப்பாற்றும் ரகசியங்கள்.!

மொபைல் பேங்கிங் பயனர்களுக்கான Red அலர்ட்.! உங்கள் பணத்தை காப்பாற்றும் ரகசியங்கள்.!

மொபைல் பேங்கிங் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதில் உள்ள அபாயங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிந்து கொள்வது அவசியம். ஹேக்கர்களின் சதி், வைரஸ் தாக்குதல்களில் இருந்துநம்மைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 12 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மொபைல் பேங்கிங் – பாதுகாப்பான பரிமாற்றத்துக்கு அவசியமான எச்சரிக்கை டிப்ஸ்!
Image Credit : Getty

மொபைல் பேங்கிங் – பாதுகாப்பான பரிமாற்றத்துக்கு அவசியமான எச்சரிக்கை டிப்ஸ்!

இன்றைய மொபைல் யுகத்தில், வங்கி சேவைகள் கூட நம் உள்ளங்கையில் வந்து விட்டன. பணம் எடுப்பது, செலுத்துவது, இ-வேலட் பயன்படுத்துவது போன்றவை அனைத்தும் சில கிளிக் மூலம் நடைபெறுகின்றன. இந்தியாவில் 92 கோடி மொபைல் பயனர்கள் உள்ள நிலையில், மொபைல் பேங்கிங் பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளது. பேடிஎம், மொபிவிக், பேயூமணி, எஸ்பிஐ படி போன்ற இ-வேலட்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

26
அதிர்ச்சி தரும் அபாயங்கள்
Image Credit : Getty

அதிர்ச்சி தரும் அபாயங்கள்

மொபைல் பேங்கிங் எளிமையாக இருந்தாலும், பல அபாயங்கள் பதுங்கி இருக்கின்றன. ஆசிய-பசிபிக் பிராந்திய வங்கிகளில் 70% வங்கிகளின் ஆப்ஸ்களுக்கு SSL சான்றிதழ் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. SSL இல்லாத ஆப்ஸ்கள் மூலம் தகவல் ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம். இந்திய வங்கிகளின் பெரும்பாலான ஆப்ஸ்களும் வைரஸ் தாக்குதலுக்கு நெருக்கமாக உள்ளன.

Related Articles

Related image1
நல்ல காலம் பொறக்குது ! கனவு பலிக்குது.. IOB-ல் 750 காலிப்பணியிடங்கள்.. வங்கி வேலை உறுதி!
Related image2
மினிமம் பேலன்ஸ் ரூ.50,000.! அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.! மயக்கம் போட்டு விழுந்த வாடிக்கையாளர்கள்.!காரணம் என்ன தெரியுமா.?!
36
ஹேக்கர்களின் சதி முறைகள்
Image Credit : Twitter

ஹேக்கர்களின் சதி முறைகள்

பொது Wi-Fi வழியாக வங்கி சேவைகள் பயன்படுத்தும்போது ‘log file’ திருடப்படும் அபாயம் உள்ளது. ‘Phishing’, ‘Spoofing’ போன்ற முறைகள் மூலம் போலி மெயில்கள் அனுப்பி, பயனர்களின் பாஸ்வேர்டுகள் மற்றும் கார்டு விவரங்களைப் பறிக்கின்றனர். இதனால் ‘Unauthorised access’ மற்றும் ‘Man in the middle’ போன்ற தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

புதிய வைரஸ் அபாயங்கள்

‘Conficker’, ‘Iloveyou’, ‘Botnet’ போன்ற வைரஸ்கள், மொபைல் போனில் உள்ள நிதி விவரங்களைத் திருடுகின்றன. சில வைரஸ்கள் ஆண்டி வைரஸ் அப்டேட் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

46
பாதுகாப்பு வழிமுறைகள்
Image Credit : Getty

பாதுகாப்பு வழிமுறைகள்

NPCI-யின் ஆலோசனைகள்

  • அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள், ஆப்ஸ்களை தவிர்க்கவும்.
  • SSL சான்றிதழ் உள்ள ஆப்ஸ்களையே பயன்படுத்தவும்.
  • SIM கார்டு தொலைந்தால் அதே எண்ணை பெறாமல் புதிய எண் எடுக்கவும்.
  • அதிகாரப்பூர்வ ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும்.
  • OTP வரவில்லை என்றால் உடனே வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்.
  • P.I.E, SSP பாதுகாப்பு வசதிகள் உள்ள ஆப்ஸ்களைப் பயன்படுத்தவும்.
56
வங்கிகளின் பாதுகாப்பு முயற்சிகள்
Image Credit : Pexels

வங்கிகளின் பாதுகாப்பு முயற்சிகள்

பெரும்பாலான வங்கிகள், IBM, Infosys போன்ற நிறுவனங்களிடம் பாதுகாப்பு பரிசோதனைகளை செய்து ஆப்ஸ்களை வடிவமைக்கின்றன. Cloud storage மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Security Labs சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், IT Security & Risk பிரிவுகள் 24/7 பாதுகாப்பை கண்காணிக்கின்றன.

66
பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தவும்.!
Image Credit : Pexels

பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தவும்.!

மொபைல் பேங்கிங் சேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. அதேசமயம், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால்தான் நம் பணம், தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரப்பூர்வ ஆப்ஸ்கள், SSL சான்றிதழ்கள், OTP பாதுகாப்பு, மற்றும் நம்பகமான நெட்வொர்க் பயன்பாடு போன்ற அடிப்படை பாதுகாப்பு வழிகளை கடைபிடிப்போம். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் வரும் அபாயங்களை சரியான முறையில் சமாளிப்பதே பாதுகாப்பான மொபைல் பேங்கிங்கின் ரகசியம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
நகர்பேசி
வங்கி விதிகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved