MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI ஆட்டோ பேமேண்ட் வரம்பு அதிகரிப்பு.. அதுவும் OTP இல்லாமலேயே.. ரிசர்வ் வங்கி சொன்ன மிகப்பெரிய குட்நியூஸ்..

UPI ஆட்டோ பேமேண்ட் வரம்பு அதிகரிப்பு.. அதுவும் OTP இல்லாமலேயே.. ரிசர்வ் வங்கி சொன்ன மிகப்பெரிய குட்நியூஸ்..

UPI மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   

2 Min read
Author : Ramya s
Published : Dec 14 2023, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அசுர வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், UPI ஆனது டிஜிட்டல் கட்டணத்தின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான முறையாக மாறியுள்ளது. நவம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 11.23 பில்லியனை எட்டியுள்ளது. UPI மூலம், ஒரே செயலியில் இருந்து பல வங்கிக் கணக்குகளை இயக்கலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்தலாம் அல்லது யாருடைய எண்ணிற்கும் உடனடியாக பணம் அனுப்பலாம்.

 

 

 

கடந்த வாரமே, பணவியல் கொள்கை மறுஆய்வின் போது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார் என்பது நினைவுகூறத்தக்கது..

 

26

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. ஆம் இப்போது UPI மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் (AutoPay) செய்ய முடியும். இதுவரை இந்த வரம்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள், இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

36

சில வகைகளில் ஒரு பரிவர்த்தனைக்கு UPI ஆட்டோ பே வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே இப்போது வாடிக்கையாளர்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், EMI கட்டணம், பொழுதுபோக்கு/OTT சந்தா, காப்பீடு மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களை எளிதாகச் செய்ய முடியும்.

46

இதற்கு, ஏதேனும் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி, தொடர்ச்சியான மின்-ஆணையைத்  (e-mandate) தொடங்க வேண்டும். இந்த தகவலை ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை 15,000 ரூபாய்க்கு மேல் ஆட்டோ பேமெண்ட் பரிவர்த்தனைகளுக்கு OTP தேவைப்பட்டது. இப்போது நீங்கள் OTP அங்கீகாரம் இல்லாமல் ரூ 1 லட்சம் ரூபாய் வரை ஆட்டோ பேமேண்ட்களை செய்ய எளிதாக ஒப்புதல் அளிக்கலாம்.

56

எந்தவொரு செயலியின் சந்தாவையும் எடுக்கும்போது, தானாக பணம் செலுத்த அனுமதிக்கிறோம், இதனால் நேரம் முடிந்ததும், பணம் தானாகவே கழிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பணம் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல வழி. சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் தாமதக் கட்டணம் அல்லது அபராதங்களைத் தவிர்க்கலாம்.

66

மேலும் இதன் மூலம் தவணை செலுத்துவது மிகவும் எளிதானது. தானாக பணம் செலுத்துவதை எந்த நேரத்திலும் எளிதாக மாற்றலாம். இதன் மூலம், பணம் செலுத்த காசோலையோ பணமோ தேவையில்லை அல்லது வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அதைத் தொடங்க அல்லது நிறுத்துவதற்கு எந்த ஆவணங்களும் தேவைப்படாது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cylinder Price: இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய LPG நிறுவனங்கள்.. சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு
Recommended image2
அபராதமே இல்லாத வங்கி கணக்கு!" – வீட்டிலிருந்தே 5 நிமிடத்தில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்
Recommended image3
அடுத்த லெவலுக்கு அப்கிரேடான PhonePe.. PIN போடும் டென்ஷன் இனி இல்லை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved