MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கி கணக்கில் ரூ.4,000 வரப்போகுது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..

வங்கி கணக்கில் ரூ.4,000 வரப்போகுது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..

பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணை நவம்பர் 19 அன்று விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. பயனாளர்கள் சில முக்கிய விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 18 2025, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎம் கிசான் ரூ.4,000
Image Credit : Asianet News

பிஎம் கிசான் ரூ.4,000

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 21வது தவணை குறித்து விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ளவர்களின் வங்கி கணக்குகளில் நவம்பர் 19, புதன்கிழமை இந்த தவணை நேரடியாக செலுத்தப்பட இருப்பதாக அரசு உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டு சரிபார்ப்பு செயல்முறை கடுமையாக மாற்றப்பட்டதால், பயனாளர்கள் சில முக்கிய விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

25
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி
Image Credit : Pixabay

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்படும். இது ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஜமா செய்யப்படும். இந்த ஆண்டு eKYC, ஆதார்–வங்கிக் கணக்கு இணைப்பு, நில விவரங்கள் போன்றவை முறையாக சரிபார்க்கப்படுகின்றன. இந்த தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால், தொகை தாமதமாகலாம். ஆனால் திருத்தங்கள் செய்யப்பட்டவுடன் தொகை வழங்கப்படும். அதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் பல மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
Govt Subsidy: தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு! ஈசியா விண்ணப்பிக்கலாம்.!
35
மீண்டும் விண்ணப்பிக்கலாம்
Image Credit : StoryBlocks

மீண்டும் விண்ணப்பிக்கலாம்

சில விவசாயிகளின் பெயர்கள் தவறுதலாக பயனாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அரசு அவற்றை மீண்டும் சேர்த்து வருகிறது. இப்படியாக நீக்கப்பட்டு, பிறகு மீண்டும் சேர்க்கப்பட்ட விவசாயிகள், கடந்த தவணையுடன் சேர்த்து ரூ.4,000 வரை பெறுகிறார்கள். உண்மையில் எந்த விவசாயியும் அநீதி அடையாதபடி அரசு கண்காணிப்பு தகுதி அதிகரித்துள்ளது. பெயர் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

45
பிஎம் கிசான்
Image Credit : Asianet News

பிஎம் கிசான்

உங்கள் பிஎம் கிசான் நிலையை உடனடியாக தெரிந்து கொள்ள எளிய வழி உள்ளது. PM-KISAN இணையதளத்தில் சென்று, ‘உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்’ விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார் எண், மொபைல் எண் அல்லது பதிவுக்கான ஐடி உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும். அதன் மூலம் தவணை அங்கீகரிக்கப்பட்டதா, நிலுவையில் உள்ளதா அல்லது மறுக்கப்பட்டதா என்பதை அறியலாம். பட்டியல் பெயர் இல்லாவிட்டால், அருகிலுள்ள CSC மையத்தில் அல்லது வேளாண்மை அலுவலக விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

55
விவசாயிகள் செய்ய வேண்டியது
Image Credit : Getty

விவசாயிகள் செய்ய வேண்டியது

நவம்பர் 19க்கு முன் விவசாயிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள்: பெயர் பயனாளர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும், eKYC செய்யப்படாவிட்டால் உடனே முடிக்கவும், ஆதார்-வங்கி இணைப்பை உறுதிப்படுத்தவும், நில விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இவற்றை செய்தால், தவணை தொகை தாமதமின்றி கணக்கில் வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி
விவசாயம்
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.1000 இருந்தா போதும்.. கையில் லட்ச ரூபாய் கிடைக்கும்.. அசத்தும் எஸ்பிஐ FD திட்டம்.!
Recommended image2
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
Recommended image3
ஹெச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.! ஏப்ரல் 1 முதல் புதன் கட்டணங்கள்.! வாடிக்கையாளர் கவனத்திற்கு.!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் பல மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
Govt Subsidy: தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.6 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு! ஈசியா விண்ணப்பிக்கலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved