- Home
- Business
- ICICI Bank: மினிமம் பேலன்ஸ் தொகையை குறைத்த ஐசிஐசிஐ வங்கி! இனி அக்கவுண்ட்டில் எவ்வளவு இருக்கணும் தெரியுமா?
ICICI Bank: மினிமம் பேலன்ஸ் தொகையை குறைத்த ஐசிஐசிஐ வங்கி! இனி அக்கவுண்ட்டில் எவ்வளவு இருக்கணும் தெரியுமா?
கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மினிமம் பேலன்ஸ் தொகையை ஐசிஐசிஐ வங்கி குறைத்துள்ளது. புதிய மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு? என விரிவாக பார்ப்போம்.

ICICI Bank Reduces Minimum Balance
இந்தியாவில் வங்கி சேவைகள் பெரும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. நாடு முழுவதும் நிறைந்துள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன. என்னதான் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, அரசு திட்டங்களின் பலன்களை பெற, ஓய்வூதியம் பெற என அனைத்து வகைகளுக்கும் வங்கிகளின் தேவை அதிகாகி வருகிறது. ஒவ்வொரு வங்கியும் தங்கள் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
மினிமம் பேலன்ஸ் தொகையை குறைத்த ஐசிஐசிஐ
அந்தந்த வங்கிகளை பொறுத்து அக்கவுண்ட்டில் நிலையாக வைத்திருக்க வேண்டிய மினிமம் பேலன்ஸ் தொகை வேறுபடும். இந்த மினிமம் பேலன்ஸ் தொகை நிபந்தனையால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிந்தும் ரிசர்வ் வங்கி இதற்கு செவிசாய்க்க மறுத்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவின் முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ (ICICI Bank) மினிமம் பேலன்ஸ் (Minimum Balance) தொகையை ரூ.10,000 ல் லிருந்து ரூ.50,000 ஆக அதிரடியாக உயர்த்தியிருந்தது.
மினிமம் பேலன்ஸ் தொகை எவ்வளவு குறைப்பு?
ஐசிசிஐயின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நிதித்துறை வல்லுனர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மினிமம் பேலன்ஸ் தொகையை உடனடியாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் தொகையை ரூ.50,000 ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்துள்ளது.
கிராமப்புற அக்கவுண்ட்களுக்கு எவ்வளவு குறைப்பு?
அதாவது பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டு இருந்த மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரை நகர்ப்புறங்கள் எனப்படும் இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டு இருந்த மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.7,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிராமப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டு இருந்த நிலையில் இப்போது ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நிம்மதி
ஐசிஐசிஐயின் இந்த அறிவிப்பால் அந்த வங்கியில் அக்கவுண்ட் (Account) வைத்திருப்பவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். ஆனாலும் ஐசிஐசிஐ வங்கி இப்போது நிர்ணயித்துள்ள மினிமம் பேலன்ஸ் தொகையும் கிராமப்புற மக்களுக்கு பெரும் சுமையாகத் தான் உள்ளது. பல்வேறு வகையில் லாபம் பார்க்கும் வங்கிகள் எதற்கு மினிமம் பேலன்ஸ் தொகையை வைக்க கட்டாயப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.