- Home
- Business
- Gold Rate Today(August 21): மீண்டும் உயர பறக்கும் தங்கம்.! என்ன செய்ய வேண்டும் அடித்தட்டு மக்கள்.?!
Gold Rate Today(August 21): மீண்டும் உயர பறக்கும் தங்கம்.! என்ன செய்ய வேண்டும் அடித்தட்டு மக்கள்.?!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,230 ஆகவும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹73,840 ஆகவும் உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களின் தங்க முதலீடு அதிகரிப்பே இதற்குக் காரணம். வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹126 ஆக விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 230 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 400 ரூபாய் அதிகரித்து 73,840 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
தமிழக நகரங்களில் தங்கம் விலை.!
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 9 ஆயிரத்து 230 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காத்திருந்து தங்கம் வாங்கலாம்.!
இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.