MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஈரோடு,கோவை, ஜோலார்பேட்டை வாசிகளுக்கு டபுள் ஜாக்பாட்..! பெங்களூரு- கொச்சி வந்தே பாரத் விரைவில்

ஈரோடு,கோவை, ஜோலார்பேட்டை வாசிகளுக்கு டபுள் ஜாக்பாட்..! பெங்களூரு- கொச்சி வந்தே பாரத் விரைவில்

இந்த அதிவேக ரயில், பயண நேரத்தை சுமார் 6.5 மணி நேரமாகக் குறைத்து, சேலம், ஈரோடு, கோவை வழியாக முக்கிய வணிக மையங்களை இணைக்கிறது.

2 Min read
Raghupati R
Published : Nov 07 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதிய வந்தே பாரத் ரயில்
Image Credit : Asianet News

புதிய வந்தே பாரத் ரயில்

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய பெங்களூரு–கொச்சி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் துவங்குகிறது. ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த அதிவேக ரயில் நவம்பர் 8, 2025 (சனிக்கிழமை) அன்று எர்ணாகுளம் ஜங்ஷனில் (கொச்சி) கொடியசைத்து துவங்கப்படும் என்றும், நவம்பர் 9 (ஞாயிறு) முதல் வழக்கமான தினசரி சேவைகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதிலும், ரயில் துவக்கம் உறுதியாக நெருங்கி வருகிறது.

24
பெங்களூரு கொச்சி ரயில்
Image Credit : Indan Railways/X

பெங்களூரு கொச்சி ரயில்

இந்த ரயில் பெங்களூருவில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, கே.ஆர்.புரம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக சென்று மதியம் 1.30 மணிக்கு கொச்சியை அடையும். தென்னிந்தியாவின் வணிக, கல்வி, தொழில்நுட்ப மையங்களை ஒரே பாதையில் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக இது அமையவுள்ளது. தற்போது இந்த பாதையில் 9–10 மணி நேரம் ஆகும் நிலையில், வந்தே பாரத் சேவை அறிமுகமானால் பயண நேரம் சுமார் 6.5 மணி நேரம் ஆகக் குறையும்.

Related Articles

Related image1
சர்வதேச தரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! ஃபர்ஸ்ட் லுக் படங்கள் வெளியீடு!
Related image2
கிளைமேட் அலர்ட்.. கரியமில வாயு உமிழ்வில் இந்தியா நம்பர் 1.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்!
34
டபுள் ஜாக்பாட்
Image Credit : ANI

டபுள் ஜாக்பாட்

ஈரோடு, கோவை, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது உண்மையில் ஒரு “டபுள் ஜாக்பாட்” எனலாம். ஏனெனில், இதன் மூலம் பெங்களூரு, சேலம், கோவை, கொச்சி போன்ற நகரங்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்ல முடியும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும், இந்த ரயில் Wi-Fi, சாய்வு இருக்கைகள், பயோ- கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

44
இந்திய ரயில்வே
Image Credit : wikimedia

இந்திய ரயில்வே

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுவதாவது, “பெங்களூரு–கொச்சி வந்தே பாரத் ரயில் தென்னிந்திய போக்குவரத்துக்கு புதிய உயிர் ஊட்டும். வணிக மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஊக்கம் தரும்,” என பதிவு. அதிகாரப்பூர்வ தகவலின்படி, எர்ணாகுளம் ஜங்ஷனில் மிகப்பெரிய அளவில் விழா நடைபெறும். இவ்வாறு தொடங்கவிருக்கும் இந்த புதிய அதிவேக ரயில், தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கான வேகமான, நவீனமான மற்றும் பெருமையான பயண சேவையாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெங்களூரு
சேலம்
கோயம்புத்தூர்
ரயில்
இந்திய இரயில்வே
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved