MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

ஒரு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாத பட்சத்தில், மற்றொன்றில் பயணிக்க இந்த வசதி உதவுகிறது. இந்த ஆன்லைன் புக்கிங் அம்சம், குறிப்பாக பண்டிகை காலங்களில் பயணிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

1 Min read
Raghupati R
Published : Sep 18 2025, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில் டிக்கெட்
Image Credit : Istock

ரயில் டிக்கெட்

இந்திய ரயில்வே, பயணிகளுக்கு அதிக வசதி வழங்கும் நோக்கில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐஆர்சிடிசி நிறுவனம், ஒரே பயணத்திற்கு இரண்டு ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதி மூலம் பயணிகளுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும்.

25
இரட்டை டிக்கெட் புக்கிங்
Image Credit : Google

இரட்டை டிக்கெட் புக்கிங்

முன்பு, ஒரே பயணத்திற்கான இரட்டை டிக்கெட் புக்கிங் செய்ய அனுமதி இல்லை. ஆனால் தற்போது புதிய விதியின் மூலம், பயணிகள் இரண்டு வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனால் ஒரு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றாலும், மறுபடியும் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.

Related Articles

Related image1
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் எடுக்க போறீங்களா? இனி இது இல்லாமல் முடியாது
Related image2
சென்னைவாசிகள் கவனத்துக்கு..! புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க!
35
ரயில்வே விதிகள்
Image Credit : Google

ரயில்வே விதிகள்

உதாரணமாக, ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்ல விரும்பினால், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களில் டிக்கெட் புக் செய்யலாம். எந்த ரயிலில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிறதோ, அதில் பயணம் செய்யலாம். மற்ற டிக்கெட் தானாகவே கேன்சல் ஆகிவிடும்.

45
கன்ஃபார்ம் டிக்கெட்
Image Credit : our own

கன்ஃபார்ம் டிக்கெட்

ஐஆர்சிடிசி இந்த வசதியை ஆன்லைன் புக்கிங்கில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பண்டிகை, சீசன் காலங்களில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் சிரமப்படும் பயணிகளுக்கு இது பெரும் நன்மையாக இருக்கும். பயணிகள் கூடுதல் மனஅழுத்தம் இல்லாமல் முன்பதிவு செய்யலாம்.

55
இந்தியன் ரயில்வே
Image Credit : our own

இந்தியன் ரயில்வே

இந்த விதி ரயில்வே பயணிகளின் சிரமத்தை குறைப்பதோடு, சேவையை மேம்படுத்தும். இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதனால், இந்த புதிய விதி, அனைவருக்கும் பயணத்தை எளிதாக்கும் முக்கியமான மாற்றமாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
தொடர்வண்டிப் போக்குவரத்து
இந்திய இரயில்வே
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
ரயில் டிக்கெட் முன்பதிவு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved