MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியில் புதிய மாற்றம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியில் புதிய மாற்றம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருவதால், மொத்த அகவிலைப்படி 58% ஆக உயர்ந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 01 2025, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மத்திய அரசு ஊழியர்கள்
Image Credit : stockPhoto

மத்திய அரசு ஊழியர்கள்

தசரா, தீபாவளி பண்டிகைகளுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த முடிவால் சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

24
ஊதிய உயர்வு
Image Credit : stockPhoto

ஊதிய உயர்வு

இதில் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இதுவரை 55% ஆக இருந்த டிஏ, தற்போது 58% ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 1, 2025 முதல், அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 2% உயர்த்தப்பட்டது. இதனால் 53%ல் இருந்து 55% ஆக உயர்ந்தது. தற்போது மீண்டும் 3% உயர்த்தப்பட்டதால், மொத்தம் 58% ஆக உள்ளது.

Related Articles

Related image1
அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்.. ஆர்பிஐ, ஐஆர்சிடிசி, வங்கி, அஞ்சல் அலுவலகம்.. எல்லாமே மாறுது!
Related image2
இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
34
நிலுவைத் தொகை
Image Credit : Asianet News

நிலுவைத் தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகை அக்டோபர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன்பு இது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். அகவிலைப்படி (DA) ஊழியர்களுக்கும், அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியதாரர்களுக்கும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வழங்கப்படுகிறது.

44
7வது ஊதியக் குழு
Image Credit : Social Media

7வது ஊதியக் குழு

ஜனவரி மற்றும் ஜூலையில் இந்த படி திருத்தப்படுகிறது. இந்த முறை எடுக்கப்பட்ட முடிவு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி கடைசி உயர்வாகக் கருதப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மத்திய அரசு
அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
சம்பள உயர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்.. ஆர்பிஐ, ஐஆர்சிடிசி, வங்கி, அஞ்சல் அலுவலகம்.. எல்லாமே மாறுது!
Recommended image2
இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved