MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளை மீறியதற்காக தெலங்கானா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Sep 26 2025, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிசர்வ் வங்கி அபராதம்
Image Credit : our own

ரிசர்வ் வங்கி அபராதம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒருமுறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு கால இடைவெளியிலும் விதிமுறைகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் 5 கூட்டுறவு வங்கிகள் பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமாக, வீட்டுவசதி நிதி ஒழுங்குமுறைகளை மீறுதல், KYC செயல்முறைகளில் பிழை, சைபர் பாதுகாப்பு குறைபாடு போன்ற பல தவறுகள் விசாரணையில் கண்டறியப்பட்டன.

24
இந்திய ரிசர்வ் வங்கி
Image Credit : ANI

இந்திய ரிசர்வ் வங்கி

இவற்றில் தெலங்கானா மாநில ஜக்தியால் பகுதியில் உள்ள காயத்ரி கூட்டுறவு அர்பன் வங்கிக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.10 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டு பொருட்களை விற்பனை செய்யும் போது தெளிவான தகவல்களை வழங்காமல் செயல்பட்டது முக்கிய குற்றச்சாட்டு ஆகும். இதுதவிர, குஜராத் மாநில வடோதராவில் உள்ள மாகர்புரா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தென் கன்னட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.1.5 லட்சம் அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டது.

Related Articles

Related image1
உஷார்.. PhonePe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
Related image2
இத்தனை மாதங்கள் பயன்படுத்தாவிட்டால்.. உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்!
34
அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகள்
Image Credit : our own

அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகள்

காரணம், வீட்டுவசதி நிதியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி முதலீடு செய்தது மற்றும் மற்றொரு கூட்டுறவு நிறுவன பங்குகளை வாங்கியது. இது வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நேரடி மீறலாகும். அதேபோல், ஆந்திர மாநில குண்டூர் மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு சர்கில் தபால் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குண்டூர் வங்கி KYC விவரங்கள் சரியான நேரத்தில் மையப் பதிவகத்தில் சேர்க்க தவறியது, தமிழ்நாடு வங்கி அனுமதி அளவை விட அதிக வட்டி விகிதத்தில் வைப்புகளை ஏற்றதும் காரணமாகும்.

44
கூட்டுறவு வங்கிகள்
Image Credit : X

கூட்டுறவு வங்கிகள்

இந்த அபராதம் வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கி பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஒழுங்குமுறைகளை மீறிய வங்கிகள் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்திலும் தேவையானது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி
வங்கிக் கணக்கு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved