தொழிலில் முன்னேற்றம் இல்லையா.. சூரிய மகாதசையில் இதை செய்யுங்க.. வாழ்க்கையே மாறும்
சூரிய மகாதசை என்பது ஆறு ஆண்டுகள் நீடிக்கும் ஒரு ஜோதிடக் காலமாகும். சூரியன் பலவீனமாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை நீக்கி வாழ்வில் வெற்றி காணலாம்.

சூரிய மகாதசை
ஜோதிடக் கணிப்புகளின்படி, ஒவ்வொரு கிரகமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆட்சி செய்கிறது. அந்த காலமே ‘மகாதசை’ என்று அறியப்படுகிறது. அதில் சூரியனின் மகாதசை ஆறு ஆண்டுகள் நீடிக்கும் என. கிரகங்களில் அரசனாகக் கருதப்படும் சூரியன், அதிகாரம், மரியாதை, தலைமைத்துவம் மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
தொழில் தடைகள் தீர
சூரியன் சிம்ம ராசியின் அதிபதி. மேஷத்தில் உச்சமாகவும், துலாவில் நீச்சமாகவும் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அந்த மகாதசை காலத்தில் வேலை, வியாபாரம், சமூக மதிப்பு போன்றவை உயர்வடையும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். முயற்சிகள் வெற்றியாக மாறும்.
சூரிய வழிபாடு
ஆனால் சூரியன் பலவீனமாக இருந்தால், அதே மகாதசை சவால்களையும் உருவாக்குகிறது. கோபம் அதிகரித்தல், அகங்காரம், தந்தையுடன் கருத்து வேறுபாடு போன்றவை. வேலை தொடர்பான தடைகள், பதவி உயர்வு தாமதம் போன்ற பிரச்சினைகளும் தோன்றலாம்.
ஞாயிறு பரிகாரம்
தொழிலில் முன்னேற்றம் இல்லாமல்தவிப்போர் ஞாயிற்றுக்கிழமை சில எளிய பரிகாரங்களை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிகாலை எழுந்து உதய சூரியனை வணங்கி தண்ணீர் அர்ப்பணிப்பது நல்ல பலனை தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் சூரிய யந்திரம் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். தந்தையுடன் நல்ல உறவு பேணுவதும் சூரியன் பலத்தை உயர்த்துவதும் என்று கூறினார்.
சூரிய தசை பரிகாரம்
மேலும், உங்கள் விருப்பத்தை ஆலமர இலை மீது எழுதி ஓடும் நீரில் விடுதல், கோவிலில் துடைப்பம் வாங்கி வைப்பது போன்ற வழிமுறைகளும் பரிகாரங்களாக சொல்லப்படுகின்றன. இவை அனைத்தும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன. நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், தொழில் வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் வழி திறக்கும் என பலர் கருதுகின்றனர்.

