- Home
- Astrology
- Guru Peyarchi 2026: அடிமேல் அடி வாங்கப் போகும் 4 ராசிகள்! உஷாரய்யா உஷாரு! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Guru Peyarchi 2026: அடிமேல் அடி வாங்கப் போகும் 4 ராசிகள்! உஷாரய்யா உஷாரு! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Guru Peyarchi 2026: ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்க உள்ளது. அவை என்னென்ன ராசிகள்? தப்பிக்க பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் போற்றப்படும் குரு பகவானின் ராசி மாற்றம் எப்போதும் ஆன்மீக ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிக்கும் குரு பகவான், தனது அடுத்தப் பயணமாக ஜூன் 2ம் தேதி தனது உச்ச வீடான கடக ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்குச் செல்வதால், அவரது கதிர்வீச்சுகளும் ஆற்றல்களும் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இந்த உச்ச குரு பெயர்ச்சி பல ராசிகளுக்கு ராஜயோகத்தையும், பெரும் அதிர்ஷ்டத்தையும் தரவிருந்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சில சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த கடக குரு பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் தங்களின் செயல்களில் கூடுதல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதையும், அதற்கான எளிய பரிகாரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு சுக ஸ்தானமான 4-வது வீட்டிற்குள் குரு பகவான் நுழைகிறார். இதனால், உங்கள் குடும்ப வட்டத்தில் சில தேவையற்ற மனவருத்தங்களும், கருத்து வேறுபாடுகளும் வந்துபோகலாம். வீட்டைப் புதுப்பிப்பது அல்லது வண்டி, வாகனப் பராமரிப்பு போன்ற காரணங்களால் எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் கையை விட்டுப் போகலாம். பணியிடங்களில் விருப்பமில்லாத இடமாற்றங்கள் அல்லது கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பொறுமை மிக அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து, கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுவது நற்பலனை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு தன மற்றும் வாக்கு ஸ்தானமான 2-வது வீட்டிற்கு குரு பகவான் வருகிறார். இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் உங்களின் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் வரலாம். கையில் பணம் வந்தாலும், அதைச் சேமிக்க முடியாமல் ஏதோ ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். உங்களின் பேச்சு வார்த்தைகளில் மிகுந்த நிதானம் தேவை. கோபத்தில் பேசும் வார்த்தைகள் குடும்பத்தில் அமைதியை கெடுக்கலாம். ஆடம்பர பொருட்களுக்காகப் பணம் செலவழிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பதோ கூடாது.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் பசு மாட்டிற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக் கீரை வழங்கி வர பணத்தட்டுப்பாடு நீங்கும். செல்வம் பெருகும்.
துலாம்
துலாம் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-வது வீட்டிற்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில திடீர் திருப்பங்களையும், சவால்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும், ஒருவித பதற்றமும் சூழ்ந்து கொள்ளும். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். வீண் வாக்குவாதங்கள் உங்கள் வேலைக்கே வேட்டு வைக்கலாம். அவசரப்பட்டு இப்போது இருக்கும் வேலையை துறப்பதோ அல்லது புதிய தொழிலில் பெரிய முதலீடுகள் செய்வதோ கூடாது.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக வழிபாட்டை மேற்கொள்வதுடன், முதியவர்கள் அல்லது ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற அன்னதானம் வழங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 6வது வீடான ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்கிறார். இந்த அமைப்பால் உங்களுக்குச் சில உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத மருத்துவச் செலவுகள் வரலாம். உங்களின் முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கக்கூடும். நீதிமன்ற வழக்குகளோ அல்லது சட்ட ரீதியான சிக்கல்களோ இருந்தால் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். சிறிய தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது,
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி, "ஓம் குருவே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து வர நன்மைகள் பெருகும்.

