Asianet News TamilAsianet News Tamil

நள்ளிரவில் கர்ப்பிணி பசுவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த சைகோ.. கொடுமை தாங்க முடியாமல் உயிரிழந்த பசு.

கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில்  இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

Youth who brutally raped and killed a pregnant cow arrested... Brutality in West Bengal.
Author
First Published Aug 31, 2022, 4:13 PM IST

கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில்  இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. மாட்டு தொழுவத்திற்குள் நுழைந்து நள்ளிரவில்  பசுவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அது உயிரிழந்துள்ளது. 

திரும்பிய பக்கமெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்புணர்வு போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்க காவல்துறையும், அரசும் போராடி வருகின்றன, ஆனால் குற்றங்கள்  குறைந்தபாடில்லை.  இது ஒருபுறம் என்றால் மறுபுறம் சில கொடூர வக்கிர மனம் படைத்தவர்கள் கால்நடைகளை கூட பாலியல் வன்புணர்வு செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருகிறது. நாய்கள், ஆடு, மாடு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி வருகின்றனர். 

Youth who brutally raped and killed a pregnant cow arrested... Brutality in West Bengal.

செல்போன், பேஸ்புக், டிவிட்டர் போன்ற தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் கையும் களவுமாக பிடிபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  இந்த வரிசையில் கடந்த  சில தினங்களுக்கு முன்னர் நாய் மற்றும் பசுவுடன் உடலுறவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒரு கைது செய்யப்பட்டார் இச் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்தது. அதேபோல் தற்போது கர்ப்பிணிப் பசுவை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞன் அது உயிரிழக்க காரணமாக இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள் : உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !

முழு விவரம் பின்வருமாறு:- மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நம்கானா தொகுதியின் வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா,  இவர் தனது தொழுவத்தில் பசு ஒன்றை வளர்த்து வந்தார், இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரத்யுத் என்ற இளைஞர் சில்மிஷ பேர்வழியாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஆர்த்தியின் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்த அவர், அங்கிருந்த கர்ப்பிணிப் பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நள்ளிரவில் யாருமில்லாததால், அப்பசுவை அவர் அதிகம் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள் : கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கடைசியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி !

இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மாடு இறந்தது, பின்னர் பொழுது விடிந்து பார்த்தபோது பசுவின் நிலைமையைக் கண்டு  ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர், பசுவின் பெண்ணுறுப்பில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு பக்கத்து வீட்டு பிரத்யுத் மீது சந்தேகம் ஏற்பட்டது, ஏனெனில் ஏற்கனவே பிரதீப் கால்நடைகளை பாலியல்  பலாத்காரம் செய்யும் பழக்கமுடையவர் என்பதால் அவர்தான் தங்கள் பசுவையும் கொடுமை செய்திருக்கக் கூடும் என சந்தேகித்தனர். 

Youth who brutally raped and killed a pregnant cow arrested... Brutality in West Bengal.

இதையடுத்து அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது, இதனையடுத்து பிரத்யுத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் செவ்வாய்க்கிழமை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரத்யூத்  மீது ஏற்கனவே ஆடு, நாய் போன்ற கால்நடைகளுடன் உடலுறவு கொண்டது, மற்றும் திருடு, வழிப்பறி போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது  குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios