Asianet News TamilAsianet News Tamil

16 சிறுவன் மீது தஞ்சாவூர் நர்ஸ்க்கு செக்ஸ் மோகம்... ஊத்துக்குழியில் வீடு எடுத்து 7 மாசமா உல்லாச வாழ்க்கை!

டிக் டாக் மூலம் பழக்கமான 16 வயசு பையனை கடத்தி சென்று ஊத்துக்குழயில் உல்லாச வாழ்க்கை நடத்தி, ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார் தஞ்சை நர்ஸ் இப்போது அந்த பெண் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

young boy was kidnapped in tirupur
Author
Chennai, First Published Jul 7, 2019, 2:10 PM IST

டிக் டாக் மூலம் பழக்கமான 16 வயசு பையனை கடத்தி சென்று ஊத்துக்குழயில் உல்லாச வாழ்க்கை நடத்தி, ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார் தஞ்சை நர்ஸ்  இப்போது அந்த பெண் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 

தேனியை சேர்ந்த ஒரு தீபக் சென்னை கிண்டியில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளான். வயசு 16. இவனது அப்பா துபாயில் இறால் வியாபாரம் செய்து வருகிறார். சின்ன வயசு பையன் என்பதால், டிக் டாக் ஆப் மீது உள்ள மோகத்தால்  நிறைய டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வந்திருக்கிறான்.  

அப்போதுதான் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நர்ஸ் பழக்கமாகி உள்ளார். சிறுவனை விட 7 வயசு பெரியவர். டிக்டாக்கில் டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, லவ் டயலாக் பேசுவது என்று ஆரம்பித்து. இருவரும் செக்ஸ் சாட் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாசம் அந்த பையன் காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் கிண்டி போலீசில் புகார் கொடுத்தனர்.  

இந்நிலையில் அந்த சிறுவனின் தந்தை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு பிறகு, விரைவில் சிறுவனை கண்டுபிடிக்கிறோம் என்று கோர்ட்டில் டைம் வாங்கியது போலீஸ். ஆனால் போலீஸ் தரப்பில் சுணக்கம் காட்டகடுப்பான அந்த பையனின்  தந்தை மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் கடுப்பான நீதிபதியை  கண்டிக்கவும்தான், போலீஸ் களத்தில்  இறங்கியது. 

சிறுவனின் போனை ட்ரேஸ் செய்ததில், திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குழி என்ற இடத்தில் சிக்னல் கிடைத்தது. இதைவைத்து போலீஸார் அடுத்தடுத்த விசாரணையில் இறங்கியபோதுதான் நர்ஸ் விவகாரம் தெரிய வந்துள்ளது. அந்த பெண் கையில் குழந்தை இருப்பதை கண்டு பயங்கர ஷாக்.

சிறுவனை கடத்தியது குறித்து அவர்கள் கேட்டதற்கு,  எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அதனால பிடிக்காம சென்னைக்கு ஓடிவந்துட்டேன்.  அந்த சமயத்தில் நானும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு பிறந்த குழந்தை இதுதான் என்று சொல்லி குழந்தையை எடுத்து காட்டி உள்ளார். 

பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 18 வயது பூர்த்தி அடையாதவனை கல்யாணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆனால் கைக்குழந்தையின் பொது நலன் கருதி தாயுடன் காப்பகத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தையின் பாதுகாப்புக்காக 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய  வேண்டும் என்று சிறுவன் காப்பகத்துக்கு அனுப்பி கோர்ட் உத்தரவிட்டது.  

Follow Us:
Download App:
  • android
  • ios