Asianet News TamilAsianet News Tamil

ஹவுஸ் ஓனரை வெட்ட வந்த கும்பல்.. தடுக்கச் சென்ற பெண் படுகொலை.. நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்.!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் பைரவன் (29). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு பார்வதி(28) என்ற மனைவியும் சபிகாஸ்வரன், மோகீஸ்வரன் என்ற மகன்களும் உள்ளனர்.

Woman was hacked to death in Dindigul tvk
Author
First Published May 29, 2024, 7:36 AM IST | Last Updated May 29, 2024, 7:39 AM IST

திண்டுக்கல் அருகே தகராறு  தடுக்கச் சென்ற பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் பைரவன் (29). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு பார்வதி(28) என்ற மனைவியும் சபிகாஸ்வரன், மோகீஸ்வரன் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவரது தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். தங்கமயில்  தென்னம்பட்டி அருகே உள்ள மணல் பிளான்ட்டுக்கு வாடகைக்கு டிராக்டரில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!

Woman was hacked to death in Dindigul tvk

அதே மணல் பிளாண்டில் எலப்பார்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் டிராக்டரில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இதனால் அவர்களுக்குள் தொழில் போட்டி காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கனகராஜ் தரப்பினர் தங்கமயிலை தேடி தென்னம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது தங்க மயிலுக்கும் கனகராஜ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தங்கமயிலை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அங்கிருந்த பார்வதி தகராறை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பார்வதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

Woman was hacked to death in Dindigul tvk

இதில் படுகாயமடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகராறை தடுக்கச் சென்ற பெண் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:  காசுக்காக இப்படிலாமா செய்வாங்க! தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த காரியம்! முக்கிய கட்சி பிரமுகர் கைது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios