71 வயது முதியவருடன் இளம்பெண் ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி. இவர் ஆண்களை எளிதில் மயக்கி அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் தனது ஆண் நண்பர்கள் மூலம் 71 வயது முதியவர் ஒருவர் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது.
வழக்கம் போல இதனை பயன்படுத்தி கொள்ள நினைத்து திட்டம் போட்டார் ராஜி. 71 வயது முதியவரும், ராஜியும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் தனியாக அறையிலிருந்தபோது நெருக்கமாக இருந்ததை ராஜி, முதியவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க..Raid : தீபாவளி வசூல் வேட்டையில் அரசு அதிகாரிகள்.. சாட்டையை சுழற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை - ‘பரபர’ ரெய்டு !
பிறகு இந்த படங்களைக் காட்டி அந்த முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் ராஜி. அதுமட்டுமின்றி பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் தனிமையில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார்.
ராஜியின் மிரட்டலுக்கு பயந்த முதியவர், ராஜி பணம் கேட்கும்போது எல்லாம் கொடுத்துள்ளார். இப்படி ராஜி அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜியின் கொடுமை தாங்க முடியாமல் முதியவர் இது குறித்துகாவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜியை கைது செய்தனர்.
இதையும் படிங்க..காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி

முதியவர் வசதியானவர் என தெரிந்து கொண்டு திட்டம் போட்டு ராஜி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் முதியவரைப் போன்று வேறு யாரிடம் எல்லாம் ராஜி பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை
