தனது மனைவியுடன் சில காவலருடன் ஒரு ஓட்டலில் உல்லாசமாக இருப்பதாக அந்த விரிவுரையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் அந்த ஓட்டலுக்கு சென்று பார்த்தவுடன், தனது மனைவியும், 3 மூன்று காவலருடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

கருத்து வேறுபாடு காரணமாக திருமணமாகி பிரிந்து சென்ற மனைவியுடன் ஓட்டலில் 3 காவலர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து கணவர் அதிர்ச்சி அடைந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், 2015ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே, அந்தப் பெண் தனது கணவர் மீது குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், புகார் கொடுக்க சென்ற இடத்தில் காவலர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- என்ன லவ் பண்ணிட்டு.. வேறு ஒருத்தவன் கூட நிச்சயதார்த்தம் பண்ணுவியா.. காதலி துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை.!

இந்நிலையில், தனது மனைவியுடன் சில காவலருடன் ஒரு ஓட்டலில் உல்லாசமாக இருப்பதாக அந்த விரிவுரையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் அந்த ஓட்டலுக்கு சென்று பார்த்தவுடன், தனது மனைவியும், 3 மூன்று காவலருடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் ஒன்றாக இருந்ததை அவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

இதுகுறித்து விரிவுரையாளர் கூறுகையில்;- என் மனைவி என்னிடம் தகராறு செய்து கொண்டு மைகாவில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மாதந்தோறும் ஜீவனாம்ச தொகை பெற்று வருகிறார். எனது மனைவியை 3 கான்ஸ்டபிளுடன் ஓட்டலில் இருப்பதை பார்தேன். இதுதொடர்பாக பார்மர் எஸ்பியை சந்தித்து புகார் அளிக்க எஸ்பி அலுவலகம் வந்தேன். ஆனால், ​​வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் எனது வாகனத்தை வழிமறித்து தாக்கினர். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்பி அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தேன் என்றார். 

மேலும், பலோத்ரா காவல் நிலைய காவலர் சந்தீப் சவுத்ரி மற்றும் மேலும் இரு போலீஸ்காரர்கள் எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர். எனவே மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் மீதும் துறை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- ஓயாத டார்ச்சர்.. தாலி கட்டி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதலன் செய்த பகீர் காரியம்..!